LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

18 வயசு திரை விமர்சனம்

 

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் "ரேனிகுண்டா" இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள படம் "18 வயசு". ஒரு மலைக்கிராமத்தில் வசித்து வரும் சாதாரணக் குடும்பத்தில் தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டு வளர்கிறான் கதாநாயகன். மகன் தந்தையிடம் மட்டும் பாசத்துடன் இருப்பது தாய்க்கு பிடிக்காததால் கதாநாயகனின் குழந்தைப்பருவம் பெற்றோர்களின் சண்டையிலேயே வளர்கிறது.
கதாநாயகனின் அம்மா வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் அப்பாவும், மகனும்.
தனது மனைவியா இப்படி என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத கதாநாயகனின் தந்தை தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதையும் நேரில் பார்த்துவிடும் கதாநாயகனை கிடைக்கும் தனிமையும், கிடைக்காத தாய்ப்பாசமும் ஒரு சைக்கோவாக மாற்றிவிடுகின்றன். சிறிய வயதில் எதுவும் தெரியாவிட்டாலும் வளர வளர கதாநாயகனுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது நன்கு தெரியவருகிறது. 
கதாநாயகியும் தன்னைப்போல பெற்றோர் இல்லாமல் அனாதையாகவும், பாசத்திற்கு ஏங்கியும் உறவுக்காரர்கள் வீட்டில் வளர்ந்தது தெரியவர நண்பனாக அறிமுகமாகி பின்பு காதல் வயப்படுகிறான் கதாநாயகன். தன் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர் “ என்னை சித்தப்பா என்று அழைக்கப் பழகிக்கொள். இனி நான் இங்கு தான் இருப்பேன்” என்று கூறி சித்ரவதை செய்ய, தன்நிலை இழக்கும் கதாநாயகனுக்கும் அவருக்குமிடையே நிகழும் சண்டையில் குறுக்கே வரும் தனது அம்மாவை கொலை செய்கிறான் ஜானி.
கொலைகாரனாகிய தன்னை வலைவீசித் தேடும் போலீஸிடமிருந்து தப்பித்து கதாநாயகியிடம் செல்லும் போது ’அம்மாவையே கொலை செய்துவிட்டான்’ என அவனை கதாநாயகி ஒதுக்கிவிடுகிறாள். சிறு வயதில் தன் தந்தை சொன்ன கதைகள் நினைவிற்கு வந்து கதாநாயகியை
ஒரு மலையடிவாரத்திற்கு கடத்திச் செல்லும் கதாநாயகனை, போலீஸ் விடாது துரத்தி வர மருத்துவராக வரும் நடிகை ரோகிணி அவன் குற்றவாளி இல்லை நோயாளி என காவல் துறைக்கு கதாநாயகனின் நிலையை புரியவைக்க முயற்சி செய்கிறார்.காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? கதாநாயகன் குணமடைந்தானா? இது போன்ற சூழ்நிலையில் காவல்துறையின் நடவடிக்கை எந்த விதத்தில் இருந்தது? என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.படத்தின் முதல் பாதியை காமெடியாக கொண்டு சென்றிருக்கின்றனர். ஹீரோவுக்கு மனநிலை சரியில்லாத நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் குழந்தைத் தனமான பேச்சை தவிர்த்திருக்கலாம். கதாநாயகி நல்ல நடிப்பு. கதாநாயகியை அடுத்து அதிக படங்களில் பார்க்கலாம். தேவையான அளவு இசை, பிரம்மிப்பான சண்டைக் காட்சிகள் என அனைத்தும் பொருத்தம். கதாநாயகனின் நண்பனான ஜாக்கியும், நாம் பார்க்காத சென்னையும் இயக்குனரின் திறமை.

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் "ரேனிகுண்டா" இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள படம் "18 வயசு". ஒரு மலைக்கிராமத்தில் வசித்து வரும் சாதாரணக் குடும்பத்தில் தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டு வளர்கிறான் கதாநாயகன். மகன் தந்தையிடம் மட்டும் பாசத்துடன் இருப்பது தாய்க்கு பிடிக்காததால் கதாநாயகனின் குழந்தைப்பருவம் பெற்றோர்களின் சண்டையிலேயே வளர்கிறது.கதாநாயகனின் அம்மா வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் அப்பாவும், மகனும்.

 

தனது மனைவியா இப்படி என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத கதாநாயகனின் தந்தை தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதையும் நேரில் பார்த்துவிடும் கதாநாயகனை கிடைக்கும் தனிமையும், கிடைக்காத தாய்ப்பாசமும் ஒரு சைக்கோவாக மாற்றிவிடுகின்றன். சிறிய வயதில் எதுவும் தெரியாவிட்டாலும் வளர வளர கதாநாயகனுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது நன்கு தெரியவருகிறது. 

 

கதாநாயகியும் தன்னைப்போல பெற்றோர் இல்லாமல் அனாதையாகவும், பாசத்திற்கு ஏங்கியும் உறவுக்காரர்கள் வீட்டில் வளர்ந்தது தெரியவர நண்பனாக அறிமுகமாகி பின்பு காதல் வயப்படுகிறான் கதாநாயகன். தன் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர் “ என்னை சித்தப்பா என்று அழைக்கப் பழகிக்கொள். இனி நான் இங்கு தான் இருப்பேன்” என்று கூறி சித்ரவதை செய்ய, தன்நிலை இழக்கும் கதாநாயகனுக்கும் அவருக்குமிடையே நிகழும் சண்டையில் குறுக்கே வரும் தனது அம்மாவை கொலை செய்கிறான் ஜானி.

 

கொலைகாரனாகிய தன்னை வலைவீசித் தேடும் போலீஸிடமிருந்து தப்பித்து கதாநாயகியிடம் செல்லும் போது ’அம்மாவையே கொலை செய்துவிட்டான்’ என அவனை கதாநாயகி ஒதுக்கிவிடுகிறாள். சிறு வயதில் தன் தந்தை சொன்ன கதைகள் நினைவிற்கு வந்து கதாநாயகியைஒரு மலையடிவாரத்திற்கு கடத்திச் செல்லும் கதாநாயகனை, போலீஸ் விடாது துரத்தி வர மருத்துவராக வரும் நடிகை ரோகிணி அவன் குற்றவாளி இல்லை நோயாளி என காவல் துறைக்கு கதாநாயகனின் நிலையை புரியவைக்க முயற்சி செய்கிறார்.காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? கதாநாயகன் குணமடைந்தானா? இது போன்ற சூழ்நிலையில் காவல்துறையின் நடவடிக்கை எந்த விதத்தில் இருந்தது? என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.

 

படத்தின் முதல் பாதியை காமெடியாக கொண்டு சென்றிருக்கின்றனர். ஹீரோவுக்கு மனநிலை சரியில்லாத நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் குழந்தைத் தனமான பேச்சை தவிர்த்திருக்கலாம். கதாநாயகி நல்ல நடிப்பு. கதாநாயகியை அடுத்து அதிக படங்களில் பார்க்கலாம். தேவையான அளவு இசை, பிரம்மிப்பான சண்டைக் காட்சிகள் என அனைத்தும் பொருத்தம். கதாநாயகனின் நண்பனான ஜாக்கியும், நாம் பார்க்காத சென்னையும் இயக்குனரின் திறமை.

by Swathi   on 27 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
களத்தில் சந்திப்போம் களத்தில் சந்திப்போம்
பூமி பூமி
ஈஸ்வரன் ஈஸ்வரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.