2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுவது அறிந்ததே.
மேலும் 2015 தமிழ் விழா சங்கீத இசைப்பேரறிஞர் திரு. பாபநாசம் சிவன் அவர்களின் 125 வது ஆண்டு நினைவாக அவரின் பொன்னான பாடல்களை முன் வைத்து ஒரு இசை, வாத்திய நிகழ்ச்சி நடபெறவுள்ளது. சிறுவயது முதல் பெரியோர்கள் வரை 30-ற்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் வந்து சிவன் அவர்களை சிறப்பித்து நினைவு கூறவுள்ளார்கள்.
மேலும் தொன்மை வாய்ந்த தமிழ் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல சிறப்பு நிகழ்சிகள் - பரதம், சிலம்பம், பறை, கிராமிய நடனம், சங்க இலக்கிய பாடல்கள் - பேரவையின் பல தமிழ் சங்கங்கள், விரிகுடாப்பகுதி சிறந்த கலைஞர்களால் வழங்கப்படும்.
|