|
|||||
தொடங்கியது மீன்பிடி தடைகாலம் ! |
|||||
வங்காளவிரிகுடா கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் விதிக்கப்படும் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கி 45 நாட்கள் வரை நீடிக்க உள்ளது.
தடைகாலம் குறித்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது, மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் வங்களாவிரிகுடா கடல் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதிக்கு
ஏப்ரல்–15 முதல் மே–29 வரையும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூர் வரை உள்ள அரபிக்கடல் பகுதியிலுள்ள மேற்கு கடற்கரை பகுதிக்கு ஜூன்–15 முதல் ஜூலை–31–ந்தேதி வரை உள்ள 45
நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுவது வழக்கம். பொதுவாக கிழக்கு கடற்கரையான வங்களாவிரிகுடா கடலோர பகுதிகளில் கத்திரிவெயில் காலங்களில் தான் மீன்கள் இனப்பெருக்கத்தில்
ஈடுபடுட்டு அதிக அளவிளான மீன்கள் உற்பத்தி ஆகின்றன. எனவே இந்த காலங்களில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்காளவிரிகுடா கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் விதிக்கப்படும் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கி 45 நாட்கள் வரை நீடிக்க உள்ளது.
தடைகாலம் குறித்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது, மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் வங்களாவிரிகுடா கடல் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதிக்கு ஏப்ரல்–15 முதல் மே–29 வரையும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூர் வரை உள்ள அரபிக்கடல் பகுதியிலுள்ள மேற்கு கடற்கரை பகுதிக்கு ஜூன்–15 முதல் ஜூலை–31–ந்தேதி வரை உள்ள 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுவது வழக்கம். பொதுவாக கிழக்கு கடற்கரையான வங்களாவிரிகுடா கடலோர பகுதிகளில் கத்திரிவெயில் காலங்களில் தான் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுட்டு அதிக அளவிளான மீன்கள் உற்பத்தி ஆகின்றன. எனவே இந்த காலங்களில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
|||||
by Swathi on 15 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|