LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார  மாநாடு, வரும் 28ல் தொடங்குகிறது.  இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் கூறியதாவது: 

உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, 2009ல் துவங்கி, பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.  இதுவரை ஐந்து மாநாடுகள் அந்தந்த நகரத்துடன் இணைந்து உச்சி மாநாடாகவும் நடத்தப்பட்டது.  ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் டிசம்பர் 28 முதல் 30 தேதிவரை மூன்றுநாட்கள்  சென்னை, லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் நடக்கவிருக்கிறது. 

இந்த மாநாட்டில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர  சிங் ஷெகாவத், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உட்பட பலர் இந்தியாவிலிருந்தும் , உலக நாடுகளிலிருந்தும் பங்கேற்கிறார்கள்.  இம்மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் , அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், பங்கேற்கின்றனர். 

மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று விருதுகள் வாழ்குகிறார்கள். இம்மாநாடு வணிகம் பெருகவும், முதலீடுகளை ஈர்க்கவும் நடைபெறுவதாக குறிப்பிட்டார். 

மேலும் விவரங்களுக்கு: https://www.economicconference.in/

 

விழாவில் பல நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பொருளாதாரம், அரசியல், தொழில்துறை மற்றும் அரசு ஆளுமைகள்

by Swathi   on 23 Dec 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
23-Dec-2019 05:04:08 நந்தன் said : Report Abuse
வணக்கம் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.