|
|||||
7-வது தேசியச் சித்த மருத்துவத் தினம் |
|||||
சென்னை தேசியச் சித்த மருத்துவ நிறுவனத் தின் இயக்குநரும், மத்தியச் சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் ப ொது இயக்குநருமான (பொறுப்ப) ஆர்.மீனாகுமாரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அகத்திய முனிவர் பிறந்தார். அந்த நாள் ஆண்டு தோறும் தேசியச் சித்த மருத்துவத் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், வரும் டிசம்பர் 30-ம் தேதி (மார்கழி 14) ஆயில்ய நட்சத்திர நாளன்று மதுரையில் 7-வது ஆண்டு சித்த மருத்துவத் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
தேசியச் சித்த மருத்துவ நிறுவனம்
‘பண்டைய ஞானம் - இன்றைய தீர்வுகள்’ என்பது இதன் கருப்பொருள். தமிழக, கேரள மாநில சித்த மருத்துவக் கல்லூரிகளின் பங்கேற்புடனும், அனைத்துச் சித்த மருத்துவர்களின் ஆதரவுடனும் மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த விழாவில் மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், துறைச் செயலர்கள், உயர் அதிகாரிகள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர், சித்த மருத்துவ அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் உள்ள தேசியச் சித்த மருத்துவ நிறுவனம், மத்தியச் சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் ஆகியவை மாநில சித்த மருத்துவ இயக்குநரகத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
டெல்லியிலிருந்து கன்னியாகுமரி வரை ‘சித்தா பைக் பேரணி’, சித்த மருத் துவத்தின் மைல் கற்கள் என்ற தலைப்பில் கண்காட்சி, மூலிகை பொருட்கள், அபூர்வ மூலிகைச் செடிகள் கண்காட்சி, சித்த மருத் துவ நூல்கள், மருத்துவ ஆய்வு இதழ்கள் வெளியீடு போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இது மட்டுமின்றி, சித்த மருத்துவத் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் ஆலோசனை முகாம், மருத்துவ மாநாடு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முதியோருக்கான உடல்நல ஆலோ சனை கலந்துரையாடல், பள்ளி மாணவர்களுக்கான உணவு, சுகாதாரம், கல்வி மேம்பாட்டுக்கான வழிமுறைகள் குறித்த சொற்பொழிவுகள், யோகாசனப் பயிற்சி பயிலரங்கு போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. |
|||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|