ஆசிய கோப்பையினை வென்றுள்ள ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி
ஓமன் நாட்டின் சலாலாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி கோப்பையினை கைப்பற்றியுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை களம் கண்டது இந்தியா. இந்தியாவின் அங்கத் பிர் சிங்,அராய்ஜுத் சிங் ஹண்டால் ஆகியோர் பந்தினை வெற்றிகரமாக இலக்கினை நோக்கி அடித்தனர். பாகிஸ்தானின் அப்துல் பஷரத் இலக்கை நோக்கி பந்தை வெற்றிகரமாக செலுத்தினார். 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா பாகிஸ்தானை வென்று, நான்காவது முறை தன் வெற்றியினை பதிவு செய்தது. இதன் மூலம் அதிக முறை ஆசிய கோப்பையினை கைப்பற்றிய நாடு இந்தியா என்ற பெருமையினை பெறுகிறது. பாகிஸ்தான் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது.
அணிக்கு தலைமை வீரர் உத்தம் சிங் பேசுகையில்,கடின உழைப்பிற்கு வெகுமதி கிடைத்துள்ளது, மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார். பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்த விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
|