14 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி எஸ்.பி. சாம்பமூர்த்தி-சகுந்தலாம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் எஸ்பி்பி். இவரது மனைவி சாவித்திரி. இவர்களுக்குப் பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். பொறியியல் படித்த எஸ்பி்பி. அவர்கள் தன் நண்பரின் உதவியால் எதார்த்தமாக ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார். அதுவே அவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 14 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1970ம் ஆண்டு தொடங்கி 2020 வரை எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களுக்கும் பாடியுள்ளார். மனிதனின் சோகங்களுக்கு மருந்தாக அமைந்தவை இவரது பாடல்கள். இசை உலகுக்கு இறைவன் கொடுத்த கொடையாக அமைந்தவர். தனிமைக்குத் துணையாக இருந்தவை இவரது பாடல்கள். பாடல்கள் மட்டுமில்லாது பல படங்களில் நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்தவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்குத் திரை உலகினர், இசை உலகினர், மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். இவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் எஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
|