LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கடினமான ஆங்கிலச் சொற்களைப் பேசி உலக சாதனை படைத்த கோவை தமிழக சிறுவன்.

சிரமமான மேற்கத்திய ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்களோடு உச்சரித்து அசத்தும் கோவை சிறுவன்.

 

 

 அறிவியல்,தொல்லியல்,மருத்துவம் தொடர்பான 50-க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் அடங்கிய ஆங்கிலச் சொற்களை எளிதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 

 கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், ரம்யா ஆகியோரின் மகன் லோகித் ஸ்ரீனிவாசன். ஆறு வயதான சிறுவன் லோகித் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், துடியலூர் பகுதியில் உள்ள மிஸ்டர் தேவ் சர்வதேச பயிற்சி நிறுவனத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் கூடுதலாகப் பயின்று வருகிறார்.இந்நிலையில் லோகித்தின் நினைவாற்றல் திறமையைக் கண்ட பயிற்சியாளர் தர்ம தேவ் சிறுவனுக்குத் தனியாகப் பயிற்சி அளித்துள்ளார்.

 

ஏற்கனவே ஓர் உலக சாதனை

 

இதில் சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட அறிவியல்,மருத்துவம்,தொல்லியல்,ஆங்கிலச் சொற்றொடர் உள்ளிட்ட துறை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொற்களைக் கூறி அசத்தியுள்ளார்.குறிப்பாக ஆங்கில எழுத்துக்களை தனித்தனியாகக் கூறியும்,அதே நேரத்தில் முழுமையான சொல்லாகவும்,அதன் ஆங்கிலப் பொருளையும் ஐந்து நிமிடம் பதினேழு விநாடிகளில் கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

 

சிறுவன் லோகித்தின் இந்த அரிய சாதனை ஆசியா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது..சிறுவன் லோகித் இதே போல 200 நாடுகளின் பெயர்களைக் கூறி ஏற்கனவே ஓர் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில் தற்போது ஆறே மாதத்தில் மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 29 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.