|
|||||
சென்னை போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பி |
|||||
ஆந்திரா, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில் போக்குவரத்து போலீசாருக்கு கடும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அந்தந்த அரசுகள் குளிர்விக்கும் தொப்பிகளையும், குற்றச்சம்வங்களை கண்காணிக்க சட்டையில் பொருத்தும் கேமராக்களும் வழங்கியுள்ளது.
***********************
அதன்படி சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் இந்தவகை தொப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடும் வெயில் காலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு சிறப்பு தொப்பி வழங்கப்படும். இது வெயிலையும் வெப்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. தற்போது, அவர்களுக்கு சோதனை முறையில் குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
******************************
தொப்பியின் மேற்புறத்தில் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட மின்விசிறி பொருத்தப்பட்டிருக்கும். அதனுடன் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இணைக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை, போலீசார் தங்கள் இடுப்பு பகுதியில் மாட்டிக்கொள்வார்கள். இந்த தொப்பி 900 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உத்தரக்காண்ட் மாநிலத்தை சேர்ந்த 'கரம்' என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
***************************
தற்போது சோதனை முறையில், சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனை பொருத்து போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போலீசாருக்கு, சட்டையில் கேமரா பொருத்தும் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
************************************
இத்திட்டத்தை தமிழக போலீஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் சென்னை போலீசாருக்கும் சட்டையில் அணியும் கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முறை வெற்றிபெற்றால் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசாருக்கு தொப்பியும், கேமராவும் வழங்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில் போக்குவரத்து போலீசாருக்கு கடும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அந்தந்த அரசுகள் குளிர்விக்கும் தொப்பிகளையும், குற்றச்சம்வங்களை கண்காணிக்க சட்டையில் பொருத்தும் கேமராக்களும் வழங்கியுள்ளது. அதன்படி சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் இந்தவகை தொப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடும் வெயில் காலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு சிறப்பு தொப்பி வழங்கப்படும். இது வெயிலையும் வெப்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. தற்போது, அவர்களுக்கு சோதனை முறையில் குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. 900 கிராம் எடை தொப்பியின் மேற்புறத்தில் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட மின்விசிறி பொருத்தப்பட்டிருக்கும். அதனுடன் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இணைக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை, போலீசார் தங்கள் இடுப்பு பகுதியில் மாட்டிக்கொள்வார்கள். இந்த தொப்பி 900 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உத்தரக்காண்ட் மாநிலத்தை சேர்ந்த 'கரம்' என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது சோதனை முறையில், சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனை பொருத்து போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போலீசாருக்கு, சட்டையில் கேமரா பொருத்தும் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் நம்பிக்கை இத்திட்டத்தை தமிழக போலீஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் சென்னை போலீசாருக்கும் சட்டையில் அணியும் கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முறை வெற்றிபெற்றால் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசாருக்கு தொப்பியும், கேமராவும் வழங்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
|
|||||
by Kumar on 29 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|