LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பறவைகளுக்காக பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாடிய தமிழக கிராமம்

 

தீபாவளி போன்ற பண்டிகை, சில சடங்குகளின் போதும் வெடி வெடிக்காமல் வனத்துறைக்கும், பறவைகளின் வாழ்வியல் முறைக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வரும் கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். 
*******************************
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள்
************************ 
தமிழ்நாடு அரசு வனத்துறையின் 3வது பறவைகள் சரணாலயமான திருப்புத்தூர் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 1977ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த பறவைகள் சரணாலயத்தில் சைனா, பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா, ஐரோப்பா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து சுமார் 37 வகையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வலசை செய்யும் காலங்களான நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.
**********************
வேட்டங்குடி கிராம மக்கள்
********************
இக்காலங்களில் குறிப்பாக நத்தை கொக்கி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், ஆற்று உள்ளான், சீல சிறகி, மஞ்சள் மூக்கு நாரை, சின்ன சீழ்கை சிறகி, பாம்பு தாரா பறவையினங்கள் வலசை வந்து செல்கின்றன. கொள்ளுகுடிப்பட்டி, சின்னகொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடி கிராமங்களில் விவசாயம் செய்யும் மக்கள் பறவைகளை வரவேற்கும் விதமாக தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், சில சடங்குகளின் போதும் வெடி வெடிக்காமல் வனத்துறைக்கும், பறவைகளின் வாழ்வியல் முறைக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
***********************
கிராம மக்களை பாராட்டி வருகிறது
*********************
இந்த பண்பினை வாழ்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இனிப்பு வழங்கி கிராம மக்களை பாராட்டி வருகிறது. இந்த ஆண்டும் மாவட்ட வன அலுவலர் பிரபா இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கிராம மக்களுக்கு தெரிவித்தார். 

தீபாவளி போன்ற பண்டிகை, சில சடங்குகளின் போதும் வெடி வெடிக்காமல் வனத்துறைக்கும், பறவைகளின் வாழ்வியல் முறைக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வரும் கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். 

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள்

தமிழ்நாடு அரசு வனத்துறையின் 3வது பறவைகள் சரணாலயமான திருப்புத்தூர் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 1977ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த பறவைகள் சரணாலயத்தில் சைனா, பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா, ஐரோப்பா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து சுமார் 37 வகையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வலசை செய்யும் காலங்களான நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.

வேட்டங்குடி கிராம மக்கள்

இக்காலங்களில் குறிப்பாக நத்தை கொக்கி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், ஆற்று உள்ளான், சீல சிறகி, மஞ்சள் மூக்கு நாரை, சின்ன சீழ்கை சிறகி, பாம்பு தாரா பறவையினங்கள் வலசை வந்து செல்கின்றன. கொள்ளுகுடிப்பட்டி, சின்னகொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடி கிராமங்களில் விவசாயம் செய்யும் மக்கள் பறவைகளை வரவேற்கும் விதமாக தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், சில சடங்குகளின் போதும் வெடி வெடிக்காமல் வனத்துறைக்கும், பறவைகளின் வாழ்வியல் முறைக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

கிராம மக்ககளுக்கு பாராட்டு

இந்த பண்பினை வாழ்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இனிப்பு வழங்கி கிராம மக்களை பாராட்டி வருகிறது. இந்த ஆண்டும் மாவட்ட வன அலுவலர் பிரபா இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கிராம மக்களுக்கு தெரிவித்தார். 

by Kumar   on 14 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.