|
|||||
கற்கால மனிதர்கள் வாழ்ந்த அதிரம்பாக்கத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் |
|||||
அத்திரம்பாக்கம் என்ற இடம் ஒரு தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
*************************************
அமைவிடம்
***************************
அத்திரம்பாக்கம் சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கொற்றலையாறு தற்போது ஓடுகின்றது. இங்கு கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கின்றன. இந்த இடம் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகிய நிலப்பொதியியல் வல்லுனர்களால் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
*****************************
அகழாய்வுகள்
***********************
அத்திரம்பாக்கத்தில் கே.டி.பானர்ஜி, சாந்தி பப்பு போன்ற அறிஞர்கள் அகழாய்வு செய்துள்ளனர். அகழாய்வு என்பது ஒரு இடத்தை முறையாகத் தோண்டி அங்கு கிடைக்கும் தொல்பொருட்களைப் பதிவு செய்து, சேகரித்து ஆராய்வதாகும். சாந்தி பப்பு அண்மையில் செய்த ஆய்வுகளின் வழியாக இந்த இடம் சுமார் 15 லட்சம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
**********************************
பண்பாட்டுச் சான்றுகள்
*******************************
இந்த இடத்தில் செய்த அகழாய்வுகளின் வழியாகக் கீழைப் பழங்கற்காலம் (Lower Palaeolithic period), இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic period), மேலைப் பழங்கற்காலம் (Upper Palaeolithic period) மற்றும் இடைக்கற்காலம் (Mesolithic period) (நுண்கற்கருவிக் காலம், Microlithic period) ஆகிய காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
************************
கருவிகள்
*******************
ஆற்றுப்படுகையில் கிடைக்கும் குவார்சைட் (quartzite) எனப்படும் ஒரு வகை உருமாறிய கல் (metamorphic rock) வகைகளை, இவர்கள் கற்கருவிகள் செய்யப்பயன்படுத்தி உள்ளனர். இக்கற்கள் கிடைக்காத இடங்களில், சுண்ணாம்புக்கல், கிரானைட் போன்ற கற்களையும் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் செய்த கருவி கைக்கோடரி என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு அச்சூலியன் கருவி என்ற பெயரும் உண்டு. இக்கருவி வெட்டுவதற்கும், குழி தோண்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இக் கருவிகளை அவர்கள் கூழாங்கற்களைப் பயன்படுத்தி மிக அழகாகச் செதில்களை உடைத்து எடுத்துச் செய்துள்ளனர். இவர்கள் கிளீவர் எனப்படும் வெட்டும் கருவியையும்; பிற்காலத்தில் சுரண்டிகள் மற்றும் பிற கருவிகளையும் பயன்படுத்தினர்.
****************************
அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
*************************
அதிரம்பபக்கம் அகழாய்வு குறித்து தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது, "திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கத்தில் மேற்கொண்ட அகழாய்வில் கல்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் நடைபெற்ற அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களாக உள்ளன. ஆனால், அதிரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கற்கால கருவிகள் சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிரம்பாக்கத்தில் ஆதிக்குடிகளின் முதல் வாழ்வாதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மனிதக்குலத்துக்கும் முன்னோடியாக தமிழினம் வாழ்ந்துள்ளதற்கான அதாரங்கள் உள்ளன. அது நாம் பெருமைபடவேண்டியதாகும். ஆகவே, கற்கால மனிதன் வாழத்தொடங்கிய அதிரம்பாக்கம் பட்டறைபெரம்புதூரில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
அத்திரம்பாக்கம் என்ற இடம் ஒரு தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. அமைவிடம் அத்திரம்பாக்கம் சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கொற்றலையாறு தற்போது ஓடுகின்றது. இங்கு கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கின்றன. இந்த இடம் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகிய நிலப்பொதியியல் வல்லுனர்களால் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வுகள் அத்திரம்பாக்கத்தில் கே.டி.பானர்ஜி, சாந்தி பப்பு போன்ற அறிஞர்கள் அகழாய்வு செய்துள்ளனர். அகழாய்வு என்பது ஒரு இடத்தை முறையாகத் தோண்டி அங்கு கிடைக்கும் தொல்பொருட்களைப் பதிவு செய்து, சேகரித்து ஆராய்வதாகும். சாந்தி பப்பு அண்மையில் செய்த ஆய்வுகளின் வழியாக இந்த இடம் சுமார் 15 லட்சம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்பாட்டுச் சான்றுகள் இந்த இடத்தில் செய்த அகழாய்வுகளின் வழியாகக் கீழைப் பழங்கற்காலம் (Lower Palaeolithic period), இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic period), மேலைப் பழங்கற்காலம் (Upper Palaeolithic period) மற்றும் இடைக்கற்காலம் (Mesolithic period) (நுண்கற்கருவிக் காலம், Microlithic period) ஆகிய காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருவிகள் ஆற்றுப்படுகையில் கிடைக்கும் குவார்சைட் (quartzite) எனப்படும் ஒரு வகை உருமாறிய கல் (metamorphic rock) வகைகளை, இவர்கள் கற்கருவிகள் செய்யப்பயன்படுத்தி உள்ளனர். இக்கற்கள் கிடைக்காத இடங்களில், சுண்ணாம்புக்கல், கிரானைட் போன்ற கற்களையும் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் செய்த கருவி கைக்கோடரி என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு அச்சூலியன் கருவி என்ற பெயரும் உண்டு. இக்கருவி வெட்டுவதற்கும், குழி தோண்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இக் கருவிகளை அவர்கள் கூழாங்கற்களைப் பயன்படுத்தி மிக அழகாகச் செதில்களை உடைத்து எடுத்துச் செய்துள்ளனர். இவர்கள் கிளீவர் எனப்படும் வெட்டும் கருவியையும்; பிற்காலத்தில் சுரண்டிகள் மற்றும் பிற கருவிகளையும் பயன்படுத்தினர். அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அதிரம்பபக்கம் அகழாய்வு குறித்து தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது, "திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கத்தில் மேற்கொண்ட அகழாய்வில் கல்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் நடைபெற்ற அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களாக உள்ளன. ஆனால், அதிரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கற்கால கருவிகள் சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிரம்பாக்கத்தில் ஆதிக்குடிகளின் முதல் வாழ்வாதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மனிதக்குலத்துக்கும் முன்னோடியாக தமிழினம் வாழ்ந்துள்ளதற்கான அதாரங்கள் உள்ளன. அது நாம் பெருமைபடவேண்டியதாகும். ஆகவே, கற்கால மனிதன் வாழத்தொடங்கிய அதிரம்பாக்கம் பட்டறைபெரம்புதூரில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
|
|||||
by Kumar on 09 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|