முன்னாள் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகம் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
சுதந்திரம் பெற்ற பின்னர் நமது நாட்டின் பிரதமர்களாக பல தலைவர்கள் பதவி வகித்து உள்ளனர். இவர்களில் சிலர் மட்டுமே இன்று உயிருடன் உள்ளனர். பலர் மறைந்து விட்டதால் அவர்களின் பெருமைகள் மற்றும் நாடு அவர்களால் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை இளைய தலைமுறை யினர் அறிய முடியவதில்லை.
இந்த குறையை போக்கும் வகையில் டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இந்த அருங்காட்சியகம் கட்டிட பணிகளுக்கு மத்திய கலாசாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
|