|
|||||
சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையை பதிவுசெய்தது ஆதித்யா எல்-1 |
|||||
ஆதித்யா விண்கலம் பதிவு செய்துள்ள சூரிய கதிர்வீச்சின் ஒளி அலை தொடர்பான தரவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில் ஆதித்யா விண்கலம் தனது பயணத்தின் போது மேற்கொண்ட சில ஆய்வு முடிவுகளை இஸ்ரோ 7-11-2023- ல் வெளியிட்டது.
************************************
அதன்விவரம் வருமாறு;- ஆதித்யாவில் உள்ள எல்1 ஒஎஸ் எனும் எக்ஸ்ரோ ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியா னது அக்டோபர் 29-ம் தேதி சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையைபதிவு செய்துள்ளது. இவை அமெரிக்காவின் ஜிஒ இஎஸ் விண்கலம் ஏற்கெனவே வழங்கிய தரவுகளுடன் ஒத்துப்பபோகிறது. இந்த தகவல்கள் சூரிய கதிர்வீச்சின் மூலம் வெளிப்படும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் ஆராய்ய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எல்1ஒஎஸ் கருவி சூரியனில் இருந்து வெளியேறும் எக்ஸ்ரேகதிர்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்தகதிர்களின் வாயிலாக உருவாகும் வெப்ப ஆற்றலையும் அதன்மூலம் அறிய முடியும்.
********************************
15 லட்சம் கி.மீ தொலைவு
*********************************
இதற்கிடையே புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதி அருகேசென்றதும் விண்கலம் அதை மையமாககொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆதித்யா விண்கலம் பதிவு செய்துள்ள சூரிய கதிர்வீச்சின் ஒளி அலை தொடர்பான தரவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில் ஆதித்யா விண்கலம் தனது பயணத்தின் போது மேற்கொண்ட சில ஆய்வு முடிவுகளை இஸ்ரோ 7-11-2023- ல் வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு;- ஆதித்யாவில் உள்ள எல்1 ஒஎஸ் எனும் எக்ஸ்ரோ ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியா னது அக்டோபர் 29-ம் தேதி சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையைபதிவு செய்துள்ளது. இவை அமெரிக்காவின் ஜிஒ இஎஸ் விண்கலம் ஏற்கெனவே வழங்கிய தரவுகளுடன் ஒத்துப்பபோகிறது. இந்த தகவல்கள் சூரிய கதிர்வீச்சின் மூலம் வெளிப்படும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் ஆராய்ய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எல்1ஒஎஸ் கருவி சூரியனில் இருந்து வெளியேறும் எக்ஸ்ரேகதிர்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்தகதிர்களின் வாயிலாக உருவாகும் வெப்ப ஆற்றலையும் அதன்மூலம் அறிய முடியும். 15 லட்சம் கி.மீ தொலைவு இதற்கிடையே புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதி அருகேசென்றதும் விண்கலம் அதை மையமாககொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.-
|
|||||
by Kumar on 08 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|