இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட
பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர்
பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.இக்கோயிலின் தெற்கே விநாயகர்
கோயிலும், கன்னிமூலையில் ராமலிங்கேஸ்வரர் கோயிலும், அதனை ஒட்டி வடபுறம் செல்வமுத்துக்குமரன் கோயிலும், அதற்கு அருகில் பர்வதவர்த்தினி
அம்மன் கோயிலும் ஒன்றை ஒன்று அடுத்தடுத்து ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் இந்தக்
கோயிலைச் சுற்றி இருக்கின்றன. ஆக மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளையும் பெற்றது இக்கோயில்.இக்கோயில் உள்ள கல்வெட்டில் கலி
4404-ல் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளதாக இருப்பதாலும், சிவன் பார்வதி கோயில் சுவரில் மீன் சின்னங்கள் பொறிக்கப் பட்டிருப்பதாலும், இக்கோயில் 13ம்
நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.
இக்கோயிலின் தெற்கே விநாயகர் கோயிலும், கன்னிமூலையில் ராமலிங்கேஸ்வரர் கோயிலும், அதனை ஒட்டி வடபுறம் செல்வமுத்துக்குமரன் கோயிலும், அதற்கு அருகில் பர்வதவர்த்தினி அம்மன் கோயிலும் ஒன்றை ஒன்று அடுத்தடுத்து ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் இந்தக் கோயிலைச் சுற்றி இருக்கின்றன.
ஆக மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளையும் பெற்றது இக்கோயில்.இக்கோயில் உள்ள கல்வெட்டில் கலி 4404-ல் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளதாக இருப்பதாலும், சிவன் பார்வதி கோயில் சுவரில் மீன் சின்னங்கள் பொறிக்கப் பட்டிருப்பதாலும், இக்கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். |