LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருச்சி – ராமேசுவரம் இடையே அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

திருச்சி ராமேசுவரம் இடையே அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

    திருச்சி – ராமேசுவரம் இடையே மேம்புடுத்தப்பட்ட தண்டவாளத்தின் உறுதித்தன்மையை அறிய ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. திருச்சி – ராமேசுவரம் இடையேயான வழித்தடத்தில் தற்போது டீசல் இன்ஜின் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதை 110 கி.மீ. ஆக அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    அதற்காக 4 மாதங்களாக தண்டவாளத்தின் உறுதித் தன்மையை அதிகரிக்கும் பணியை ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டனர்.

    இப்பணிகள் முடிவடைந்த நிலையில் தண்டவாளத்தின் உறுதித் தன்மையை சோதனை செய்யும் வகையில் திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு 110 கி;.மீ. வேகத்தில் சோதனை ஓட்ட ரயில் 4 பெட்டிகளுடன் நேற்று இயக்கப்பட்டது. இந்த ரயில் இடையில் எங்கேயும் நிற்காமல் காரைக்குடி.சிவகங்கை வழியாக ராமேசுவரம் சென்றது. அதே போல் மாலையில் ராமேசுவரத்தில் இருந்து திருச்சி சென்றது.

    இதில் ரயில்வே பொறியாளர்கள் பயணம் செய்து தண்டவாளத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்தனர்.

by Lakshmi G   on 13 Aug 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.