|
|||||
திருச்சி – ராமேசுவரம் இடையே அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை |
|||||
திருச்சி – ராமேசுவரம் இடையே அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை திருச்சி – ராமேசுவரம் இடையே மேம்புடுத்தப்பட்ட தண்டவாளத்தின் உறுதித்தன்மையை அறிய ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. திருச்சி – ராமேசுவரம் இடையேயான வழித்தடத்தில் தற்போது டீசல் இன்ஜின் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதை 110 கி.மீ. ஆக அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக 4 மாதங்களாக தண்டவாளத்தின் உறுதித் தன்மையை அதிகரிக்கும் பணியை ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டனர். இப்பணிகள் முடிவடைந்த நிலையில் தண்டவாளத்தின் உறுதித் தன்மையை சோதனை செய்யும் வகையில் திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு 110 கி;.மீ. வேகத்தில் சோதனை ஓட்ட ரயில் 4 பெட்டிகளுடன் நேற்று இயக்கப்பட்டது. இந்த ரயில் இடையில் எங்கேயும் நிற்காமல் காரைக்குடி.சிவகங்கை வழியாக ராமேசுவரம் சென்றது. அதே போல் மாலையில் ராமேசுவரத்தில் இருந்து திருச்சி சென்றது. இதில் ரயில்வே பொறியாளர்கள் பயணம் செய்து தண்டவாளத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்தனர். |
|||||
by Lakshmi G on 13 Aug 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|