LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விவசாயத் துறைக்கு தனி நிதியறிக்கை, அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

*விவசாய துறைக்கு  தனி நிதியறிக்கை~ அதிகரிக்கும் எதிர்பார்ப்பு* 
 அரசின் நிதியறிக்கை என்பது ஒரு ஆண்டில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட இருக்கும் வரவு செலவுகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நோக்கங்களுடன் திட்டமிடுவதாக அமையும்.
அனைத்து துறைகளின் வருவாய் செலவுகளை ஒரே நிதி அறிக்கையில் உட்படுத்தினால் அது ஒற்றை நிதி அறிக்கையாகும். துறைதோறும் தனித்தனியாக உருவாக்கினால் அது பன்மை நிதி அறிக்கை எனப்படும்.பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒற்றை நிதியறிக்கை முறை நடைமுறையில் உள்ளது.பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பன்மை நிதியறிக்கை முறை நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் இரண்டு நிதி அறிக்கை முறை பின்பற்றப்பட்டு(இரயில்வே,பொது) வந்துள்ள நிலையில் தற்போதைய மத்திய அரசு ரயில்வே நிதியறிக்கையினை பொதுநிதிஅறிக்கையுடன் இணைத்து ஒற்றை நிதியறிக்கையாக  வெளியிட்டது.
ஒவ்வொரு துறையும் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கினை வகிக்கிறது. அதை பொறுத்தே நிதியறிக்கை அமைகிறது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விவசாயத்திற்கு தனி நிதி அறிக்கை என்பது அனைவரின் கவனத்தையும் பெற்று எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான துறை விவசாயத்துறை என்பதில் ஐயமில்லை. மாநில மக்கள் தொகையில் 50% விவசாயம் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மக்கள் ஈடுபட்டுள்ளனர். கரும்பு சாகுபடியில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடத்திலும்,அரிசி உற்பத்தியில் இந்தியாவில் ஆறாவது இடத்தையும் தமிழ்நாடு வகிக்கின்றது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து  காய்கறிகளும் பழங்களும் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் விவசாயத்துறையின் உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது, விவசாயிகளின் பாதுகாப்பு, அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தல்ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு நிதியறிக்கை அமையும் என அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறது.அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது .ஜூலை மாத இறுதிக்குள் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் இந்த ஆண்டு அது சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
விவசாயத் துறைக்கு என தனி நிதி அறிக்கை இந்த நிதியாண்டில் சமர்ப்பிக்கப்பட்டால் இந்தியாவில் முதல் முறையாக விவசாயத் துறைக்கு தனி நிதியறிக்கை அறிவித்த முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்.

by R.Gnanajothi   on 10 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.