பத்திரப்பதிவு பற்றிய புகார் தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு
பொதுமக்கள் பத்திரப்பதிவு பற்றிய புகார்களை தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை விரைவாக அமைக்கப்படும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியிருக்கிறார்.மதுரையில் அமைந்துள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது இதனை தெரிவித்தார்.
பத்திரப்பதிவில்இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் சரியான கட்டணத்துடன் காலதாமதமின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆவணங்களைப் பதிவு செய்ய ஆணையிட்டிருப்பதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி அவர்கள் கூறினார்.பத்திரப்பதிவு பற்றிய புகார்கள் இருப்பின் அது பற்றி தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை புதிதாக விரைவில் அமைக்கப்படும் என்றும்,போலி இரசீதுகளை தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துபவர் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 இன் படி நடவடிக்கைக்கு உள்ளவர் என்றும் அவர் கூறினார்
குற்றங்களை கவனிக்கத் தவறும் அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
|