சர்வதேச Grand Master பட்டம் பெற்றார் தமிழக சதுரங்க வீரர் பிரக்னானந்தா ரமேஷ் பாபு
12 வயது உடைய சென்னையை சேர்ந்த பிரக்னானந்தா ரமேஷ்பாபு சர்வதேச Grand Master பட்டம் பெற்றதோடு மிகக்குறைந்த வயதில் Grand Master பட்டம் பெற்றவர் பட்டியலில் இரண்டாம் இடத்தினையும் பெற்ற பெருமைக்குரியவர் ஆகியுள்ளார். Grand Master -குரிய மூன்று படிநிலைகளைக் கடப்பதற்கான புள்ளிகளைச் சரியாகப் பெற்று சாதனை புரிந்துள்ளார் இந்த தமிழகச் சிறுவன்.
ரஷ்யாவில் ஜூலை 10 முதல் ஃபீடே( FlDE ~Fedaration Internationale Des Echecs) என்ற பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.150 க்கும் மேலான நாடுகள் இச்சதுரங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 2-ஆம் சுற்றில் முதல் ஆட்டத்தில் காபிரியேல் சர்கிசியன் என்பவரை வீழ்த்தி தன் சதுரங்க திறனை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்னானந்தா ரமேஷ்பாபு.
பன்னிரண்டே வயதில் சர்வதேச Grand Master பட்டம் பெற்றுள்ள இவருடைய வெற்றியை நினைத்து பெருமை கொள்வதோடு, தமிழர் தங்களுக்கான வெற்றியாகவே கொண்டாடி வருகின்றனர்.
|