இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய புதினமாகும். வார இதழில் கல்கி எழுதிய இந்நெடுங்கதை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகும். தனி நூலாக வெளியிடப்பட்டு பல பதிப்புகளையும் கண்டுள்ளது.இப்புதினம் சோழ பேரரசைப் பற்றிக் கூறும் கற்பனை கலந்த வரலாற்றுப் புதினமாகும்.
கல்கியின் தலை சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படமாக வெளிவர உள்ளது.படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.காதலும், வீரமும்,கற்பனையும் ததும்பும் பொன்னியின் செல்வன் படைப்பினை மணிரத்னம் இயக்கியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் பங்கு பெற்றுள்ளனர்.கல்கியின் எழுத்தில் கண்முன் விரிந்த தமிழ் படைப்பான பொன்னியின் செல்வன், தற்போது திரையில் வர இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
|