LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அமர்நாத் இராமகிருஷ்ணனின் தமிழக வருகை

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அமர்நாத் இராமகிருஷ்ணனின் தமிழக வருகை

தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தவர் அமர்நாத் இராமகிருஷ்ணனே ஆவார். இன்று கீழடி உலக அளவில் அறியப்பட்டதற்கான தொடக்கப் பணிகளை சரியாகச் செய்தவர்.2014-15 காலகட்டத்தில் வைகை நதிக்கரையின் தமிழர் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் அமர்நாத்.அதன் மூலமாகவே தமிழரின் பெரும் பொக்கிஷ அடையாளமாய் இருந்த கீழடி உலகிற்கே தெரிய வந்துள்ளது.

அப்பொழுதே கீழடி நாகரிகம் உலகை திரும்பி பார்க்க வைத்த நிலையில் ஆய்வின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்னமே அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

மத்திய தொல்லியல் துறை கைவிட்ட கீழடி அகழாய்வை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கருத்தோடு முன்னெடுத்து தற்போது கீழடி அருங்காட்சியகமும் அமையவிருக்கிறது. தொடர்ந்து கீழடி அகழாய்வு தமிழர் நாகரிகப் பழமையும் மேன்மையும் கூறும் தொல்பொருட்களைத் தந்து வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகம் வந்துள்ள அமர்நாத் இராமகிருஷ்ணன் அகழாய்வுப் பணிக்கு முக்கிய ஆலோசகராக இருப்பார் எனக்கூற முடியும்.நாகரிகப் பெருமை காக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.சரியான முறையில் முன்னேறிக் கொண்டிருக்கும் அகழாய்வுப் பணிக்கிடையே அமர்நாத் அவர்களின் வருகை மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

by R.Gnanajothi   on 18 Sep 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.