|
|||||
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கென அமைகிறது தனி வாரியம், தமிழக அரசின் அறிவிப்புகள் |
|||||
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கென அமைகிறது தனி வாரியம்,தமிழக அரசின் அறிவிப்புகள் பல்வேறு காரணங்களால் தமிழகம் விட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொன்மைமிக்க தமிழினம் பட்டியலிட்டு சொல்லுமளவு பல நாடுகளில் பரவியுள்ளது.உலகின் பெரும்பான்மையான நாடுகளில் வாழும் இனமாக தமிழினம் உள்ளது.பல காரணங்களால் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை அரவணைப்பது தாய்த்தமிழ் நாட்டின் கடமை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் ரூபாய் 5 கோடி முன்பணம் கொண்டு 13 புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும் இதற்கு மூலதனச் செலவினமாக 1.40 கோடி ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: கருணாநிதி வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு தமிழர் வாழ்வில் ஒளியேற்றும் விளக்காக அவர்களின் உற்ற தோழனாக விளங்கும் என்பதில் ஐயமில்லை என முதல்வர் கூறியுள்ளார். பல்வேறு தமிழ் அமைப்புகள் புலம்பெயர் தமிழர்களுக்கென தம் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து தற்போது நினைவுகூறத்தக்கது. திமுக அதனை தனது அரசியல் வாக்குறுதியாக்கி, நிறைவேற்றவும் செய்துள்ளது பாராட்டுக்குரியது. |
|||||
by R.Gnanajothi on 12 Oct 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|