|
|||||
கர்ப்பிணிப்பெண்கள் கவனத்திற்கு: |
|||||
பிரசவம் மற்றும் கல்லீரல் நோய்கள் குறித்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் இரைப்பை குடலியல் துறை சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசப்பட்டவை: டாக்டர் சு.கீதாலட்சுமி, முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்குப் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும். அதில் அதிகளவில் தொற்றக்கூடியது, மஞ்சள் காமாலை நோய்க் கிருமிகள்தான். இது கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் குழந்தைக்கும் பரவுவதற்கு அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது. அதனால், அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்புத் தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது.அதுகுறித்து அனைத்துப் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்: தொற்று நோய்கள் அதிகளவில் பரவுவதால் அது குறித்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிகிறது. ஆனால், பெண்களுக்கு வரும் தொற்று அல்லாத நோய்களான மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள் குறித்து விழிப்புணர்வு அதிகளவில் இல்லை.பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின் விகிதம் சர்வதேச அளவைவிட தமிழகத்தில் மிகவும் குறைந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை இதைவிடக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். டாக்டர்.ஏ.ஆர். வெங்கடேஸ்வரன், தலைவர், இரைப்பை குடலியல் துறை: திருமணத்திற்கு முன் பெண்களுக்கு மஞ்சள் காமாலை உள்பட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். அதில் வைரஸ் இருப்பது தெரிய வந்தால் அதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். |
|||||
by MAYIL on 11 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|