அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)
மணக்குடவர் உரை:
அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு,
இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வதாதலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் -பொறாமையுள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டிய தில்லை.
உம்மை எதிர்மறைப் பொருட்டு. அதுவே என்னும் பிரிநிலை யேகாரம் தொக்கது.
கலைஞர் உரை:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு
பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.
Translation
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate..
Explanation
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
Transliteration
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukkayum Keteen Padhu
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்