LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாலக்காடு- பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்!

பாலக்காடு-பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் 100 கிமீ வேகத்தில் ரயில் இயக்கி சோதனை ஓட்டம்  நடந்தது.  

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டிற்கு சுமார் 45 கிலோ மீட்டர் தூரமுள்ள ரயில் பாதை 2016 -ல் அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் ரயில்கள் அனைத்தும் அதிகபட்சமாக தற்போது 80 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்பாதையில் ரயில்களை அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்காக பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி வரை ரயிலை 100 கிமீ வேகத்தில் இயக்கி, சோதனை ஓட்டம் நடந்தது.

 பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து  காலை 10.10 மணி அளவில் மூன்று இணைப்பு பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் 10.45 மணி அளவில் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது.

சோதனை ஓட்ட ரயிலில், தென்னக ரயில்வே முதன்மை பொறியாளர் மஸ்தான்ராவ், பாலக்காடு கோட்ட முதன்மை பொறியாளர் அனந்தராமன் ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது அவர்கள் தண்டவாளத்தில் ஏதேனும் அதிர்வு உள்ளதா என்றும், வரும் காலங்களில் 100 கிமீ வேகத்தில் ரயில் இயக்குவதற்கான தண்டவாளத்தின் உறுதித்தன்மை குறித்தும் ஆராய்ந்தனர்.

by Mani Bharathi   on 10 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.