கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கம் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு மாரீசன் என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
கத்தி திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்குள் பலமுனைகளிலிருந்தும் படத்துக்கு பல்வேறு பிரச்னைகள் வந்து கொண்டு இருப்பதால் கொஞ்சம் டென்ஷன் உடன் இருக்கிறார்கள் கத்தி படக்குழுவினர்'. இருந்தாலும் அவற்றை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டு கத்தி திரையிட தயாராகி வருகிறது. அதேசமயம், கத்தி பட டென்ஷனை மறந்துவிட்டு புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய்க்கு அவருக்கு விருப்பமில்லையாம். இதனால் கத்தி படம் வெளியான பிறகு மாரீசன் படப்பிடிப்பு தொடங்கினால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.
விஜய் இப்படி சொன்னது சிம்புதேவன் மற்றும் அவரது யூனிட்டுக்கு உள்ளுக்குள் மனநிம்மதியை தந்திருக்கிறது.
காரணம்...சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்குக்கடற்கரைசாலையில் கோவளம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 100 எக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனை மற்றும் தர்பார் செட்டை பிரமாண்டமாக அமைத்து வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ்.
வேலையில் தொய்வு ஏற்பட்டதால் திட்டமிட்ட தேதியில் செட் வேலைகள் முடியவில்லை. விஜய் படப்பிடிப்பை தள்ளி வைத்ததால் தற்போது ரிலாக்ஸாக செட் அமைக்கும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு உள்ளனர் கலைஞர்கள்.
|