அமெரிக்காவின் பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவனை அமெரிக்க போலீசார் நேற்று சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவனை, அமெரிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், இரண்டு குண்டுகள் வெடித்ததில், மூன்று பேர் பலியாயினர்; 170 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, எப்.பி.ஐ., அதிகாரிகள், தீவிரமாக தேடி வந்தனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து இரண்டு இளைஞர்களின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் நீண்ட முடியுடன் தொப்பி அணிந்துள்ளனர். இந்த நபர்களின் பெயர், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.இந்நிலையில் அமெரிக்காவின் வாட்டர்டவுன் பகுதியில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப மையத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கும், பாஸ்டன் நகரில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.அந்த வழியாக சென்ற காரை மறித்து தப்பி சென்ற இரண்டு தீவிரவாதிகளையும் போலீசார் துரத்தி சென்றனர். இதில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொருவன் தப்பி சென்று விட்டான். கார் டிரைவர் காயமின்றி தப்பினார்.தப்பி சென்றவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்.
|