290 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கையும் தாக்கி அளிக்கும் சக்தி கொண்ட பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக செய்து முடித்தனர்.கோவா அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருந்த தர்காஷ் போர்க்கப்பலில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு பிரமோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும், அது வெற்றிகரமாக பாய்ந்து சென்று இலக்கை தாக்கியதாகவும் பிரமோஸ் ஏவுகணை திட்டத்தின் தலைவர் ஏ.சிவதாணு பிள்ளை நேற்று பானாஜியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.ஒலியை விட 2.8 மடங்கு வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை இந்திய–ரஷிய விஞ்ஞானிகளின் கூட்டு தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
|