புதுடில்லியில் நேற்று நடந்த காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் காவிரி கண்காணிப்புக்குழுத்தலைவரும் மத்திய நீர்வளத் துறை செயலருமான டி.வி. சிங் தலைமை தாங்கினார்.மேலும் தமிழகம்,கேரளா,புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூடத்தில் இருமாநில நிலையையும் விசாரித்த டி.வி. சிங் தமிழகத்துக்கு நவம்பர் 16 முதல் 30ம் தேதி வரை 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார்.தமிழக அதிகாரிகள் தமிழகத்திற்கு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை திறக்க வேண்டிய 52.5 டி.எம்.சி.,தண்ணிர் கேட்டபோது அவர் அது குறித்து எந்த பதிலும் அளிக்க வில்லை.
|