ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சமையல் காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி போன்ற முடிவுகளால் மக்களின் எதிர்ப்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் அரியானா மாநிலத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மானிய விலையில் ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர் தரும் திட்டத்தை பரிசீலிக்குமாறு தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில் மானிய விலையில் ஆண்டுக்கு 12 சமையல் காஸ் சிலிண்டர்களை தருவது குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் கலந்து ஆலோசித்த பிறகு இந்த திட்டம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
|