LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது தொடர்பான கோரிக்கை முதல்வர் வாயிலாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளை, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம், ஆசிய புலம்பெயர்வோர் மற்றும் புலம் பெயரும் பெண்கள் அமைப்பு ஆகியன சார்பில் சென்னை, எழும்பூரில் உள்ள விடுதியில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அரசு சார்பில் நடவடிக்கை

இதில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: கலந்துரையாடலில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு சார்பிலான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது தொடர்பான கோரிக்கை முதல்வர் வாயிலாக மத்திய அரசிடம் எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

இதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் பேசும்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தலுக்கு அடிப்படை மனிதநேயம் இல்லாததே காரணம். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

7 உதவி மையங்கள்

மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசும்போது வீட்டுவேலை தொழிலுக்காக செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளியே சொல்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதில்லை. இதற்காக அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது என்றார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இணை இயக்குநர் கே.ரமேஷ் பேசும்போது, “வெளிநாடு செல்வோருக்கு தக்க அறிவுறுத்தல் வழங்கி, தகுதி வாய்ந்த நபர் மூலமாகவே வெளிநாடு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக 7 உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே சென்னையில் 1 மையம் உள்ளது. இதுதவிர்த்து, அதிகளவில் வெளிநாடு செல்வோர் உள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பிரிடெப்பார்ட்சர் ஓரியன்டேசன் சென்டர் என்னும் மையங்கள் ஜனவரிக்குள் ஏற்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

பாதுகாப்பு சட்டங்கள் வேண்டும்

தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் வளர்மதி பேசும்போது, “வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பெரியளவில் பேசப்படுவதில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சர்வதேச அளவிலான சட்டங்களை மத்திய அரசு ஏற்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கிளாராம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

by Kumar   on 30 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.