கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.ஆறாவது ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதின, முதலில் பாட்டிங் செய்த பஞ்சாப் அணி 138 ரன்னுக்கு தனது அணித்து விக்கெட்டுகளையும் இழந்தது, இதனை அடுத்து விளையாடிய சென்னை அணி 17.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. இதில் சென்னை வீரர் ஹசி 54 பந்துகளில் 86 ரன்களையும், விஜய் 50 பந்துகளில், 50 ரன்னையும் எடுத்தனர்.
|