இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் தேடப்பட்டு வந்த சென்னை சூதாட்ட கும்பல் தலைவர் பிரசாந்த் நேற்று கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரணடைந்தார். மேலும் பிரசாந்த் சரணடைந்ததை அடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர் இதில் சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட லேப் டாப், கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பிரசாந்த் மீதான் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல முக்கிய தகவல்கள் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|