LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை வானிலை ஆய்வு மையம் உலகத் தரம் வாய்ந்தது

தென்மாவட்டத்தில் பெய்த பெருமழையைத் துல்லியமாகக் கணிக்க வானிலை ஆய்வு மையம் தவறிவிட்டதாகத் தமிழக அரசு விமர்சித்து இருந்தது.

 

தென் மாவட்ட மழைவெள்ள பாதிப்புக்கு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மீது தமிழ்நாடு அரசு குறை கூறியது.

 

இதைத்தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

பயன்பாட்டில் இருக்கும் அதிவேகக் கணினிகள்

 

இந்த விமர்சனங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அளித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாகத் தவறான விமர்சனங்கள் சமீப காலமாக வெளியாகி வருகிறது.இந்திய வானிலைத் துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேகக் கணினிகள், இஸ்ரோவின் செயற்கைக்கோள் வசதிகள்,ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பார்கள் உலகத்தரத்துக்கு ஒப்பானவை.

 

சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன.குறிப்பாக சென்னை வானிலையைக் கண்காணிக்க 2 டாப்ளர் ரேடார்களும்,தென் தமிழகத்தைக் கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

 

சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள்

 

இதில் 'எக்ஸ் பேண்ட்' வகை ரேடார் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு, நிறுவப்பட்டது ஆகும்

இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

 

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் உலகத் தரம் வாய்ந்தது என்று உலக வானிலை அமைப்பு பாராட்டி உள்ளது.வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாகப் பெருமளவு உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

இந்த நிலையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்குப் பதிலாக சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்துச் செய்யப்படும் விமர்சனங்கள்,அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களைப் புண்படுத்தும் விதமாகவும்,நமது இந்தியத் தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. இத்தகைய தவறான விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

by Kumar   on 27 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.