LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

சித்திரைப் பெண்ணே சிகரத்தில் வைத்திடுக!

சித்திரைப் பெண்ணே சிகரத்தில் வைத்திடுக!   6.4.2014 

                                                          --வே.ம.அருச்சுணன் - மலேசியா  

 

சித்திரைப் பெண்ணே சித்திரைப்பெண்ணே

சேதி தெரியுமா?

தமிழர் இனம் இங்கே

தடம் புரண்டு; தறிகெட்டு

பல்லாண்டுத் தரிசுகளாய்

வாழ்கின்றார் கொடுமைதன்னில்

மீட்டெடுப்பாரில்லை

கடைக்கண் பார்வை வேண்டுகின்றோம்

சித்திரைப் பெண்ணே

மடிதனிலே பால் வார்ப்பாய்

மாந்தராய் வாழவைப்பாய்

சிகரத்தில் வைத்தே அழகு செய்வாய்.......!

 

பூ மணக்கும் புத்தாண்டில்

புதுமைகள் மலரட்டும்

புதிய வரவுகள் மலையாகட்டும்

பிரிவுகள் மறையட்டும்

ஒற்றுமையால் சாதிப்போம்

தூற்றியோர் மலைக்கட்டும்

புறம் பேசியோர் தொலையட்டும்

குணக்குன்றாய்த் தமிழர் எழட்டும்

குறைகள் புறம் தள்ளி இனியென்றும்

வளங்களுடன் வாழ்விப்பாய்

சித்திரைப் பெண்ணே தளராமல்

பாதம் வணங்குகின்றோம்

கண் திறந்து பார்தித்திடுக

சித்திரைப் பெண்ணே…………!

 

மொழி அழிவிற்கு இனமே

அரிவாள் ஏந்தும் கொடுமை

புனித பூமியில் நிகழ்வது

சிசுவின் வாயில் ஈன்றவளே

குண்டு வைத்தல் தகுமா?

கலையும் பண்பாடும்

சிதறு தேங்காய் ஆனபின்னே

வீரிய இனத்திற்கு வீர வணக்கம்

ஒரு கேடா?

மூளைதனைச் சலவைச் செய்திடு

சுயச்சிந்திப்பைப் பதிப்பாய்  

காலங்கள் கடக்குமுன்னே

கரை சேரும் திக்கைக்காட்டு

தவளைகள் தெளியட்டும்

பிசகின்றிப் பிழைக்கட்டும்

சிந்தையில் உதிப்பாய்

சித்திரைப் பெண்ணே....!

 

உழைப்பு புவியை மாற்றும்

உழைப்போர் உயர்வார்

மானம் காக்கும் மன்னர்களே

மனித நேயம் துளிர்க்கும்

தேடிய தருணத்தில் இனமானம்

உயர்ந்த நிற்கும் அன்று

தமிழினமே வாழ்த்தும்

சித்திரைப் பெண்ணே........!

 

இனிமையின் உச்சம் உன் வரவு

ஏங்கிய உள்ளங்கள்

கொள்வார் தன்னிறைவு

வாழ்க சித்திரைப் பெண்ணே..........!

by Swathi   on 06 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.