LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலக பாரம்பரிய சின்னமாக வீராணம் ஏரி அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடைபெற்றது.இந்தியாவில் 75 நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய புராதன சின்னங்களாக உலகளாவிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

 

இதை கொண்டாட மத்திய நீர்ப்பாசனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் கல்லணை, கீழணை, வீராணம் ஏரி புராதன சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டதால், விழிப்புணர்வுப் பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.

 

44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசன வசதி

 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது இந்த வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய எரியக இருந்து வருகிறது. டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, வட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், இந்த ஏரியின் தண்ணீரை சம்பா விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த ஏரி மூலம் ராஜஸ்தா மோட்டார்கள் மூலம் சென்னை மாநகரின் குடிநீருக்கு இந்த தண்ணிர் முக்கிய ஆதாரமாகவும் விளங்கி உள்ளது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியின் நீலம் 14 கி.மீ நீளமுள்ளது.

 

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர்188 கி.மீ பயணித்து கல்லணைக்கு வந்து சேர்ந்து, கல்லணையில் இருந்து கொள்ளிடத்தின் வழியாக 81 கி.மீ பயணித்து, கீழணையை வந்தடைந்து, வடவாறு வழியாக 22 கி.மீ பயணித்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து அடையும் நிலை உள்ளது.வீராணம் ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்த சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் மொத்த அகலம் 5.6 கி.மீ. ஏரியின் பரப்பளவு 15 சதுர மைலாக உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடியாகும்.

 

வீராணம் ஏரியில் சுற்றுலா தளம்

 

ஏரியின் கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 1000ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி செய்யும் தொழிலை நடத்தி வருகின்றனர். இந்த ஏரி தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவான வகையில் அமைந்துள்ளதால் இந்த ஏரியை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில், “8 கோடி மதிப்பீட்டில் வீராணம் ஏரியில் சுற்றுலா தளம் மற்றும் சலையோர பூங்கா அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இடம் வேண்டுகோள் விடுத்தார்.

by Kumar   on 03 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.