|
|||||
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை |
|||||
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
***********************
திருக்குறளை தேசிய நூலாகவும், உலக பொதுமறையாகவும் அறிவிக்கக்கோரி தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, மெல்பர்ன் தமிழ் சங்கம், குவைத் தமிழ் இசுலாமிய சங்கம், பாளையங்கோட்டை தூய யோவான் அரசு கல்லூரி சார்பில் உலக திருக்குறள் ஐந்தாவது மாநாடு திருநெல்வேலி கோடீஸ்வரன் நகரில் உள்ள லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியில் 2023 செப்டம்பர் 22-ம் தேதிவெள்ளிக்கிழமை தொடங்கியது.
*******************************
திருவள்ளுவர் கருங்கல் சிலை
********************************
மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 3 அடி உயரம் மற்றும் 500 கிலோ எடையுள்ள திருவள்ளுவர் கருங்கல் சிலையை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் திறந்துவைத்து பேசியதாவது, " தஞ்சாவூர் மண்ணுக்கும், தாமி ரவருணி தண்ணீருக்கும் தொடர்பு உண்டு. அதனால்தான், இந்த மாநாடு தாமிரவருணி நதிக் கரையில் நடைபெறுகிறது. தமிழை பற்றி பேச வேண்டும், தமிழை பற்றி பாட வேண்டும் என்ற உணர்வு உலகம் முழுவதும் வர வேண்டும். இளைஞர்களுக்கும், அந்த உணர்வு வர வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் உருவாக்கப்படுகிறது. தமிழ் பாதைக்கு இளைஞர்களை ஈர்க்க வேண்டும். அந்தப் பணியை அசிரியர்கள் தான் செய்ய வேண்டும். இன்றைக்கு தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ப் பற்றோடு இல்லை. 1,330 திருக்குறள் தெரிந்தால் தான் கல்லூரியில் தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பற்றோடு இருந்துவிட்டால் தமிழை பாதுகாக்க இது போன்ற மாநாடுகள் தேவையில்லை.
********************************
அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும்
************************************
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். கல்விக்கூடங்களில், ஆலயங்களில் தமிழ் விளங்க வேண்டும். வழக்காடு மன்றங்களில் தமிழ் நடமாட வேண்டும் என்ற பொதுக்கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கிற போது அத்தனை அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும். திருக்குறள், தமிழ் போன்ற விஷயங்களில் வேற்றுமையை மறந்து செயல்பட வேண்டும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும். உலக பொதுமறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் காரணமல்ல. நாம்தான் காரணம். திருக்குறள், தமிழ் ஆகியவற் றின் பேரில் அமைப்புகள் வைத்திருப்பவர்கள் சென்னையில் கூடி உண்ணாவிரதம் என அறிவித்தால் உடனடியாக திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
************************************
வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நாம் ஒரு நாள் சென்னையில் கூடிவிட்டால், நம்முடைய கோரிக்கை வெற்றிபெறும். ஒவ்வொருதிருக்குறளும் ஜாதி,மத, இளங்களைக் கடந்து மனிதனுக்கு நெற்றியில் அடித்தாற்போல் கருத்துகளை சொல்லக்கூடியது. வள்ளுவர் உலகத்திற்கே சொந்தக்காரர். அனைத்து விடுதிகளிலும், அனைத்து கல்விக் கூடங்களிலும் திருக்குறள் இருக்க வேண்டும். திரும்புகிற திசையெல்லாம் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாகவும், தேசிய நூலாகவும் அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" என்றார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாகவும், உலக பொதுமறையாகவும் அறிவிக்கக்கோரி தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, மெல்பர்ன் தமிழ் சங்கம், குவைத் தமிழ் இசுலாமிய சங்கம், பாளையங்கோட்டை தூய யோவான் அரசு கல்லூரி சார்பில் உலக திருக்குறள் ஐந்தாவது மாநாடு திருநெல்வேலி கோடீஸ்வரன் நகரில் உள்ள லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியில் 2023 செப்டம்பர் 22-ம் தேதிவெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவள்ளுவர் கருங்கல் சிலை மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 3 அடி உயரம் மற்றும் 500 கிலோ எடையுள்ள திருவள்ளுவர் கருங்கல் சிலையை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் திறந்துவைத்து பேசியதாவது, " தஞ்சாவூர் மண்ணுக்கும், தாமி ரவருணி தண்ணீருக்கும் தொடர்பு உண்டு. அதனால்தான், இந்த மாநாடு தாமிரவருணி நதிக் கரையில் நடைபெறுகிறது. தமிழை பற்றி பேச வேண்டும், தமிழை பற்றி பாட வேண்டும் என்ற உணர்வு உலகம் முழுவதும் வர வேண்டும். இளைஞர்களுக்கும், அந்த உணர்வு வர வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் உருவாக்கப்படுகிறது. தமிழ் பாதைக்கு இளைஞர்களை ஈர்க்க வேண்டும். அந்தப் பணியை அசிரியர்கள் தான் செய்ய வேண்டும். இன்றைக்கு தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ப் பற்றோடு இல்லை. 1,330 திருக்குறள் தெரிந்தால் தான் கல்லூரியில் தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பற்றோடு இருந்துவிட்டால் தமிழை பாதுகாக்க இது போன்ற மாநாடுகள் தேவையில்லை. அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். கல்விக்கூடங்களில், ஆலயங்களில் தமிழ் விளங்க வேண்டும். வழக்காடு மன்றங்களில் தமிழ் நடமாட வேண்டும் என்ற பொதுக்கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கிற போது அத்தனை அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும். திருக்குறள், தமிழ் போன்ற விஷயங்களில் வேற்றுமையை மறந்து செயல்பட வேண்டும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும். உலக பொதுமறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் காரணமல்ல. நாம்தான் காரணம். திருக்குறள், தமிழ் ஆகியவற் றின் பேரில் அமைப்புகள் வைத்திருப்பவர்கள் சென்னையில் கூடி உண்ணாவிரதம் என அறிவித்தால் உடனடியாக திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நாம் ஒரு நாள் சென்னையில் கூடிவிட்டால், நம்முடைய கோரிக்கை வெற்றிபெறும். ஒவ்வொருதிருக்குறளும் ஜாதி,மத, இளங்களைக் கடந்து மனிதனுக்கு நெற்றியில் அடித்தாற்போல் கருத்துகளை சொல்லக்கூடியது. வள்ளுவர் உலகத்திற்கே சொந்தக்காரர். அனைத்து விடுதிகளிலும், அனைத்து கல்விக் கூடங்களிலும் திருக்குறள் இருக்க வேண்டும். திரும்புகிற திசையெல்லாம் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாகவும், தேசிய நூலாகவும் அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" என்றார்.
|
|||||
by Kumar on 26 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|