|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 1 - பகுதி 2 குறளோடு உறவாடு– அஷ்ராஃப் குன்ஹூனு - பிற மொழிகளில் திருக்குறள் |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு திருக்குறளும், சமய நூல்களும்: திருக்குறளை சமய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். திருக்குறளுக்கும் திருக்குரானுக்கும் இடையே அதிக வேறுபாடுகள் உள்ளன. பகவத்கீதைக்கும் திருக்குறளுக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன என்று திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறினார். திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்கி அவற்றைத் திருக்குறளின் மூலத்தோடு ஒப்பிட்டு, எந்த மொழிபெயர்ப்பு திருக்குறளோடு பொருந்தி வருகிறது என்று ஆராய்ந்தார். ஏறத்தாழ 25 ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் திருக்குறளோடு ஆராய்ந்துள்ளார். எல்லா மொழிபெயர்ப்புகளும் சிற்சில குறைபாடுகள் உடையனவாக உள்ளன என்று திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறுகிறார். திருக்குறளின் நான்கு பிரிவுகள்: திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் சேர்த்து மொத்தம் 108 அதிகாரங்கள் உள்ளன. அவற்றைத் திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் நான்கு பிரிவுகளாகப் பகுத்துள்ளார். 1. ஆன்மீகம் 2. நடத்தை 3. ஆளுகை 4. சமூகம் ஆகியவையே ஆகும். பள்ளிப்பருவமும், திருக்குறளும்: பதின்ம வயதுக் குழந்தைகளுக்கு நடத்தை குறித்த குறட்பாக்களைக் கற்றுக் கொடுக்கலாம். நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சமூகம் குறித்த குறட்பாக்களை கற்றுக் கொடுக்கலாம். உலகியல் நோக்கில் உள்ள குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஒன்றாம் வகுப்பிலிருந்தே குழந்தைகளுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுக்கலாம். பொருள் புரியவில்லை என்றாலும் கூட நாளடைவில் புரிந்து கொள்வார்கள். ஆனால் சிறு வயதிலேயே திருக்குறள் குழந்தைகளின் மனதில் விதைக்கப்பட வேண்டும் என்று திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறுகிறார். திருக்குறளும் வாழ்வியலும்: எல்லா சமய நூல்களும் நல்லொழுக்கத்தையே கற்றுக் கொடுக்கின்றன. திருக்குறளைக் கற்றவர் நிச்சயம் நல்லொழுக்கத்துடன் வாழ்வார் என்றில்லை. ஆனால் திருக்குறளைக் கற்றவர்களில் 75 சதவீதம் பேர் திருக்குறளால் வழிநடத்தப்படுகின்றனர் என்பதில் ஐயமில்லை. திருக்குறள் நிச்சயமாக மனிதனை நல்ல குடிமகனாக மாற்றும். எனவே இளமையிலேயே குழந்தைகளுக்குத் திருக்குறள் கட்டாயமாக கற்றுத் தரப்பட வேண்டும். திருக்குறள் மனிதர்களிடம் பரவ… திருக்குறளில் இல்லாத கருத்துக்கள் இல்லை என்று கூறலாம். அத்தனை நீதிகளும், அத்தனை வாழ்க்கைக்கான நெறிமுறைகளும் திருக்குறளில் உள்ளன. பேருந்துகளில் திருக்குறள்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுடன் தமிழிலோ ஆங்கிலத்திலோ அத்திருக்குறளுக்கான பொருளும் சேர்த்து எழுதப்பட வேண்டும் எனத் திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறுகிறார். மேலும் நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் பேருந்துகளில் டிஜிட்டல் பலகைகள் கொண்டுவரப்பட்டு அதில் திருக்குறள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற குறட்பாக்கள் அப்பலகைகளில் ஓட வேண்டும். அதாவது இன்று நட்பு தினம் என்றால் நட்புக்கான குறட்பாக்கள் பேருந்தின் டிஜிட்டல் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும், தேர்தல் என்றால் ஆட்சியாளரின் கடமை, குடிமகனின் கடமை குறித்த குறட்பாக்கள் பொருளுடன் டிஜிட்டல் பலகைகளில் ஓட வேண்டும் என்று திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறுகிறார். |
|||||
by Lakshmi G on 06 Oct 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|