LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

போலி வேளாண் கடன்கள்: ஊழல் செய்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், தமிழக உழவர் முன்னணி கோரிக்கை !!

மத்திய அரசு வங்கிகள் வழங்கிய வேளாண் கடனில் ஏறத்தாழ 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடத்துள்ளதாக அரசு தலைமை தணிக்கை  அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகள் பெயரால் நடந்துள்ள இந்த மாபெரும் ஊழல் இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அரசுடைமை வங்கிகள் வழங்கிய வேளாண் கடன்களில் 23 % கடன்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆவணங்களைத் திருத்தியும், போலி கையொப்பமிட்டும் நடைபெற்ற மோசடிகள் மட்டுமின்றி வேளாண் கடன்பெறத் தகுதி இல்லாதவர் பலரும் உழவர்கள் பெயரால் வங்கிக்கடன் பெற்றுள்ளனர். இதனால் 2008-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த கடன் தள்ளுபடி சலுகையை விவசாயிகள் அல்லாத பலரும் பெற்று சட்டவிரோதமாகப் பயனடைந்துள்ளனர். இக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட காலத்திலேயே வங்கிகள் அறிவித்த புள்ளி விவரங்களை ஆதாரமாகக் காட்டி இதில் நடந்துள்ள முறைகேடுகளை தமிழக உழவர் முன்னணி முன்பே சுட்டிக்காட்டியுள்ளது. வேளாண்மை வகையினத்தின் கீழ் மோட்டார் பம்பு செட்டுகள், உரம், பூச்சிக்கொல்லி, விதை தயாரிப்பு, உணவுப்பதப்படுத்துதல் உள்ளிட்ட பலத் தொழில் நிறுவனங்களை மத்தியஅரசு கடந்த 2007-ல் கொண்டு வந்தது. இதுதான் இந்த மாபெரும் ஊழலுக்கு சட்டவாய்ப்பைத் திறந்து விட்டது.எனவே இப்போது வேளாண் கடன்களை மோசடியாக பெற்ற நிறுவனங்கள் மீதும், தனி நபர்கள் மீதும், இந்த முறைகேட்டுக்குத் தேவையான வங்கி அதிகாரிகள் மீதும், அரசியல் புள்ளிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அரசு வங்கிகளில் வேளாண்மை என்ற பெயரால் தொழில் நிறுவனங்களும், வேளாண்மைக்குத் தொடர்பில்லாத தனி நபர்களும் கடன் பெறுவதற்கு உள்ள அரசின் கொள்கை முடிவுகளை உடனடியாகக் கைவிட வேண்டும். வேளாண்மை என்ற பெயரில் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் மட்டுமே வழங்கப்படுவதற்கு உறுதியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக உழவர் முன்னணி  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

by MAYIL   on 08 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.