LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் லட்சுமண சாமி முதலியார்

 

1887ம் ஆண்டு அக்டோபர்  14-ம் தேதி ஆற்காடு குப்புசாமி சித்தம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார் லட்சுமண சாமி முதலியார். அன்று மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த கர்னூலில்(தற்போது ஆந்திர மாநிலத்தில்) பிறந்தார். இவரது சகோதரர் ராமசுவாமி முதலியார். இருவரும் இரட்டை சகோதரர்கள். பள்ளி படிப்பிற்கு பிறகு அவர்கள் சென்னைக்கு சென்று 1903-ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தனர். இதில் லட்சுமணசாமி முதலியார் மருத்துவம் படிக்க முடிவு செய்து சென்னை மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு பிரிவில் சேர்ந்தார். மருத்துவப்படிப்புற்கு பிறகு சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் தனது பணியை தொடங்கினார். அங்கு அவர் 35 ஆண்டுகள் பணியாற்றினார். 1934-ல் அவர் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரின் அர்ப்பணிப்பு  காரணமாக 1939 ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியின் முதல் இந்திய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். லட்சுமணசுவாமி முதலியார் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவர் ஆவார். மேலும், அவர் மருத்துவர் எம்.கே. கிருஷ்ண மேனனுடன் இணைந்து எழுதிய "முதலியார் மகப்பேறியல்" என்ற புத்தகம் மகப்பேறியல் குறித்து வந்த முதல் புத்தகமாக போற்றப்பட்டது. இந்த புத்தகம் மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டது.
********************************************
 அவர் ஆற்றிய உரைபுத்தகமானது
'**********************************
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் ஆனார். 1948 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த முதல் உலக சுகாதார சபைக்கான இந்தியக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார். 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், எட்டாவது உலக நாடுகளின் துணைத் தலைவராக இருந்தார். 1955 இல் சுகாதார சபை மற்றும் பதினான்காவது உலக சுகாதார சபையின் தலைவரானார். மேலும் 1954 இல் பத்ம பூஷண் மற்றும் 1963 இல் பத்ம விபூஷண் விருதுகளும் பெற்றார்.
*******************************************************
மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபையில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் “தேடல் வெளிச்சம்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
**************************************
டாக்டர் லட்சுமணசாமி ஒரு சிறந்த கட்டிடக்கலை நிபுணர். சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கட்டிடம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள பட்டமளிப்பு மண்டபம் ஆகியவை அவரது கட்டிடக்கலை நிபுணத்துவத்திற்கு சான்று.
***************************************
புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர், சர்வதேச பொது சுகாதாரப் பணியாளர் என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வியாளர்  லட்சுமண சாமி முதலியார் 1974-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் காலமானார்.

1887ம் ஆண்டு அக்டோபர்  14-ம் தேதி ஆற்காடு குப்புசாமி சித்தம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார் லட்சுமண சாமி முதலியார். அன்று மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த கர்னூலில்(தற்போது ஆந்திர மாநிலத்தில்) பிறந்தார். இவரது சகோதரர் ராமசுவாமி முதலியார். இருவரும் இரட்டை சகோதரர்கள். பள்ளி படிப்பிற்கு பிறகு அவர்கள் சென்னைக்கு சென்று 1903-ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தனர். இதில் லட்சுமணசாமி முதலியார் மருத்துவம் படிக்க முடிவு செய்து சென்னை மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு பிரிவில் சேர்ந்தார்.

மருத்துவப்படிப்புற்கு பிறகு சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் தனது பணியை தொடங்கினார். அங்கு அவர் 35 ஆண்டுகள் பணியாற்றினார். 1934-ல் அவர் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரின் அர்ப்பணிப்பு  காரணமாக 1939 ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியின் முதல் இந்திய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். லட்சுமணசுவாமி முதலியார் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவர் ஆவார். மேலும், அவர் மருத்துவர் எம்.கே. கிருஷ்ண மேனனுடன் இணைந்து எழுதிய "முதலியார் மகப்பேறியல்" என்ற புத்தகம் மகப்பேறியல் குறித்து வந்த முதல் புத்தகமாக போற்றப்பட்டது. இந்த புத்தகம் மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டது.

அவர் ஆற்றிய உரை புத்தகமானது

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் ஆனார். 1948 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த முதல் உலக சுகாதார சபைக்கான இந்தியக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார். 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், எட்டாவது உலக நாடுகளின் துணைத் தலைவராக இருந்தார். 1955 இல் சுகாதார சபை மற்றும் பதினான்காவது உலக சுகாதார சபையின் தலைவரானார். மேலும் 1954 இல் பத்ம பூஷண் மற்றும் 1963 இல் பத்ம விபூஷண் விருதுகளும் பெற்றார்.

மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபையில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் “தேடல் வெளிச்சம்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

டாக்டர் லட்சுமணசாமி ஒரு சிறந்த கட்டிடக்கலை நிபுணர். சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கட்டிடம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள பட்டமளிப்பு மண்டபம் ஆகியவை அவரது கட்டிடக்கலை நிபுணத்துவத்திற்கு சான்று.

புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர், சர்வதேச பொது சுகாதாரப் பணியாளர் என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வியாளர்  லட்சுமண சாமி முதலியார் 1974-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் காலமானார்.

 

by Kumar   on 21 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.