|
|||||
புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் லட்சுமண சாமி முதலியார் |
|||||
1887ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஆற்காடு குப்புசாமி சித்தம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார் லட்சுமண சாமி முதலியார். அன்று மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த கர்னூலில்(தற்போது ஆந்திர மாநிலத்தில்) பிறந்தார். இவரது சகோதரர் ராமசுவாமி முதலியார். இருவரும் இரட்டை சகோதரர்கள். பள்ளி படிப்பிற்கு பிறகு அவர்கள் சென்னைக்கு சென்று 1903-ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தனர். இதில் லட்சுமணசாமி முதலியார் மருத்துவம் படிக்க முடிவு செய்து சென்னை மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு பிரிவில் சேர்ந்தார். மருத்துவப்படிப்புற்கு பிறகு சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் தனது பணியை தொடங்கினார். அங்கு அவர் 35 ஆண்டுகள் பணியாற்றினார். 1934-ல் அவர் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரின் அர்ப்பணிப்பு காரணமாக 1939 ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியின் முதல் இந்திய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். லட்சுமணசுவாமி முதலியார் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவர் ஆவார். மேலும், அவர் மருத்துவர் எம்.கே. கிருஷ்ண மேனனுடன் இணைந்து எழுதிய "முதலியார் மகப்பேறியல்" என்ற புத்தகம் மகப்பேறியல் குறித்து வந்த முதல் புத்தகமாக போற்றப்பட்டது. இந்த புத்தகம் மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டது.
********************************************
அவர் ஆற்றிய உரைபுத்தகமானது
'**********************************
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் ஆனார். 1948 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த முதல் உலக சுகாதார சபைக்கான இந்தியக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார். 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், எட்டாவது உலக நாடுகளின் துணைத் தலைவராக இருந்தார். 1955 இல் சுகாதார சபை மற்றும் பதினான்காவது உலக சுகாதார சபையின் தலைவரானார். மேலும் 1954 இல் பத்ம பூஷண் மற்றும் 1963 இல் பத்ம விபூஷண் விருதுகளும் பெற்றார்.
*******************************************************
மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபையில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் “தேடல் வெளிச்சம்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
**************************************
டாக்டர் லட்சுமணசாமி ஒரு சிறந்த கட்டிடக்கலை நிபுணர். சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கட்டிடம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள பட்டமளிப்பு மண்டபம் ஆகியவை அவரது கட்டிடக்கலை நிபுணத்துவத்திற்கு சான்று.
***************************************
புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர், சர்வதேச பொது சுகாதாரப் பணியாளர் என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வியாளர் லட்சுமண சாமி முதலியார் 1974-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் காலமானார்.
1887ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஆற்காடு குப்புசாமி சித்தம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார் லட்சுமண சாமி முதலியார். அன்று மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த கர்னூலில்(தற்போது ஆந்திர மாநிலத்தில்) பிறந்தார். இவரது சகோதரர் ராமசுவாமி முதலியார். இருவரும் இரட்டை சகோதரர்கள். பள்ளி படிப்பிற்கு பிறகு அவர்கள் சென்னைக்கு சென்று 1903-ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தனர். இதில் லட்சுமணசாமி முதலியார் மருத்துவம் படிக்க முடிவு செய்து சென்னை மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு பிரிவில் சேர்ந்தார். மருத்துவப்படிப்புற்கு பிறகு சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் தனது பணியை தொடங்கினார். அங்கு அவர் 35 ஆண்டுகள் பணியாற்றினார். 1934-ல் அவர் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரின் அர்ப்பணிப்பு காரணமாக 1939 ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியின் முதல் இந்திய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். லட்சுமணசுவாமி முதலியார் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவர் ஆவார். மேலும், அவர் மருத்துவர் எம்.கே. கிருஷ்ண மேனனுடன் இணைந்து எழுதிய "முதலியார் மகப்பேறியல்" என்ற புத்தகம் மகப்பேறியல் குறித்து வந்த முதல் புத்தகமாக போற்றப்பட்டது. இந்த புத்தகம் மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டது. அவர் ஆற்றிய உரை புத்தகமானது மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் ஆனார். 1948 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த முதல் உலக சுகாதார சபைக்கான இந்தியக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார். 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், எட்டாவது உலக நாடுகளின் துணைத் தலைவராக இருந்தார். 1955 இல் சுகாதார சபை மற்றும் பதினான்காவது உலக சுகாதார சபையின் தலைவரானார். மேலும் 1954 இல் பத்ம பூஷண் மற்றும் 1963 இல் பத்ம விபூஷண் விருதுகளும் பெற்றார். மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபையில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் “தேடல் வெளிச்சம்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. டாக்டர் லட்சுமணசாமி ஒரு சிறந்த கட்டிடக்கலை நிபுணர். சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கட்டிடம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள பட்டமளிப்பு மண்டபம் ஆகியவை அவரது கட்டிடக்கலை நிபுணத்துவத்திற்கு சான்று. புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர், சர்வதேச பொது சுகாதாரப் பணியாளர் என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வியாளர் லட்சுமண சாமி முதலியார் 1974-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் காலமானார்.
|
|||||
by Kumar on 21 Oct 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|