LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1 பில்லியன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு சாதனை.

இந்திய வரலாற்றில் முதன்முறையாகக் கடந்த மாதம் தமிழ்நாடு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்தது.

 

இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.

 

மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.

1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபாரச் சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

 

சாதனை

 

இந்திய வரலாற்றில் முதன்முறையாகக் கடந்த மாதம் தமிழ்நாடு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 32.6% மாநிலத்தின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டில் 8 Bn+ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

எப்படிச் சாத்தியம்

 

கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடைசியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாகப் பல்வேறு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.

 

கொள்கை வெளியீடு

 

இந்த நிலையில்தான் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயாராகி வரும் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான புதிய மாநில கொள்கையைத் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட உள்ளது.

 

நம்பர் 1 எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாளராகத் தனது இருப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இந்தக் கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது, சென்சார்கள், சிப்செட்கள் போன்ற மேம்பட்ட மின்னணு தயாரிப்புகளின் உற்பத்தி, செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களின் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை விரைவில் வெளியிடும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி 4.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழ்நாடு.. குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் இணைந்து செமி கண்டக்டர்ஸ் உற்பத்திக்கான தனி கொள்கை கொண்ட மாநிலங்களாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாநாடு

சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாகக் குவிந்து வருகின்றன.

 

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது

by Kumar   on 23 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.