கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அன்னவீட்டில் மீரா சாகிப்- கதீஜா பீவி தம்பதியருக்கு 1927-ம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் பாத்திமா பீவிகாலமான பாத்திமா பீவி(96), சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பணியாற்றிவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்மணி பாத்திமா பீவி ஆவார். தமிழகத்தின் 11வது ஆளுநராக 1997-ம் ஆண்டு முதல் 2001 ஜூலை 3 வரை பாத்திமா பீவி பதவி வகித்தார்.
1950-ல் கேரளத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு முன்சிப் கோர்ட் நீதிபதியானார். மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி, மாவட்ட அமர்வு நீதிபதியாக பணியாற்றி 1983-ல் ஐகோர்ட் நீதிபதியானார். 1989-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார்.
அண்மையில் வயது முதுமை காரணமாக உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி தனது 96 வயதில் 23-11-2023-ம் தேதி காலமானார். பாத்திமா பீவி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
|