வங்கியில் கூட்டாக வாங்கிய கடனுக்கு ஒருவர் இறந்தால் யார் பொறுப்பு
sandhiya - 28 Feb 2013 07:11 AM
எனது அப்பாவும், அவரது நண்பரும் சேர்ந்து வங்கியில் கூட்டாகக் கடன் வாங்கியிருந்தனர். இந்த நிலையில் அப்பாவின் நண்பர் இறந்துவிட்டார். தற்போது அந்தக் கடனுக்கு யார் பொறுப்பேற்பது?
Ragavi Said : 28 Feb 2013 08:09 AM
உங்களது அப்பாவோடு இணைந்து கடன் வாங்கியவர் இறந்துவிட்டதால் மொத்தக் கடனையும்
கட்டவேண்டிய பொறுப்பு உங்கள் அப்பாவைச் சேர்ந்தது அல்ல; ஆனால் வங்கிகள் கடனைத் திருப்பி
வசூலிப்பதற்கு உங்கள் தந்தைதான் முதன்மையான நபராவார். இறந்தவருக்கு பிள்ளைகள் இருக்கும்
பட்சத்தில் அவர்களிடம் அந்த கடனை வசூலிப்பார்கள், பிள்ளைகள் இல்லை என்றால் உங்களது
தந்தையே அந்த கடனை திருப்பி செலுத்த கடமை பட்டவராவார்.