உறவினர் வாங்கிய கடனுக்கு நான் பணம் செலுத்தினால் அதற்கு வரிச்சலுகை பெறமுடியுமா
rani - 18 Dec 2012 03:54 AM
எனது மாமா வங்கியில் வீட்டு கடன் வாங்கியபோது என் என் பெயரையும் சேர்த்து கொண்டார்.தற்போது அவரால் வங்கிக் கடனை செலுத்த முடியாத சூழல் உள்ளது.எனவே அந்த கடனின் தவணையையும் நான் செலுத்தி வருகிறேன். அந்த கடனுக்குக் கட்டும் பணத்திற்கு நான் வரிச் சலுகை பெற முடியுமா?
priya Said : 18 Dec 2012 08:41 AM
நீங்கள் வரிச்சலுகை பெறமுடியாது.ஏனென்றால் சொத்தின் உரிமையாளர் பெயரில் வீட்டுக் கடன் வாங்கப்பட்டிருந்தால் அவர் மட்டுமே வரிச் சலுகை பெறலாம். வீட்டுக் கடனுக்கான கடனை இணை கடன்தாரர் திருப்பிச் செலுத்தும்போது வரிச் சலுகை கிடைக்காது.