வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டி முடிக்கப்படாத நிலையில், அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்க முடியுமா?
kalaiselvi Said : 26 Feb 2013 07:54 AM
வீட்டுக் கடன் கட்டி முடிக்கப்படாத நிலையிலும் வீட்டை விற்க முடியும். அதற்கு வீட்டை விற்கும்
உரிமையாளர், வாங்குபவர், வீட்டு கடன் வழங்கிய வங்கி ஆகிய மூவரும் கூட்டாக 'டிரை பார்ட்டி
அக்ரிமென்ட்’ செய்துகொண்டாலே போதும். இதன்படி வீட்டை வாங்குபவர் நிலுவையிலுள்ள கடனை
வங்கியில் செலுத்தினால் அவர் வசம் வீட்டு ஆவணங்களை வங்கி அளிக்கும். மேலும் அந்த வீட்டை
வாங்குபவருக்கு வீட்டுக் கடன் பெறும் தகுதியிருக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் மூலமும் அவர்
அந்த வீட்டை வாங்கலாம்.