பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கச் சென்ற நான்கு பெண்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.பாகிஸ்தான் அரசு போலியோ நோயை தடுக்க சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை தற்போது நடத்தி வருகிறது.மூன்று நாட்கள் நடக்கும் முகாமில் 2ம் நாளான நேற்று கராச்சியில் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்தது.பைக்கில் வந்த மர்ம நபர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க வந்த பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதேபோல் மூன்று இடங்களில் நடந்த தாக்குதலில் 4 பெண்கள்,2 ஆண்கள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்திற்கு பதில் அளித்த தலிபான் தீவிரவாதிகள், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்தை அமெரிக்காவின் வேவு பார்க்கும் நடவடிக்கையாக கருதி சுட்டதாக அறிவித்துள்ளனர்.தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கைகளால் பாகிஸ்தானில் சுமார் 2.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுக்க முடியாத நிலை உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
|
In a string of attacks in Pakistan, unidentified gunmen killed at least four female and two male health workers who were employed with a UN-backed programme to immunize children from polio, an endemic disease in the country.The Taliban have spoken out against polio vaccination in recent months, claiming the health workers are acting as spies for the U.S. and the vaccine itself causes harm. |