|
|||||
அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம் |
|||||
உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை மனனம் செய்வதால் அதன் பொருள் அறிவதால் மாணவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பதை அறிந்த நம் முன்னோர் பள்ளி தொடக்கக்கல்வி முதல் திருக்குறளை கட்டாயமாக்கினர்.
&&&&&&&&&&&&&&&&&&&
மாணவர்களும் அந்த திருக்குறளை பயின்று அதன் பொருள் அறிந்து வளரத்தொடங்கி அதன்பால் ஏற்பட்ட ஈர்ப்பால் மற்றவர்களுக்கும் அதை சுட்டிக்காட்ட தொடங்கியுள்ளனர். நிச்சயம் தொடக்க கல்வி கற்றவர்களுக்கு "அகர முதல எழுத்தெல்லாம்" என்ற குறளை மறந்திருக்க வாய்ப்பில்லை.
&&&&&&&&&&&&&&&&&&&&&&
திருக்குறளின் பொருளை அறிய, அறிய அதை அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிப்பது உண்மை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
&&&&&&&&&&&&&&&&&&&
திருக்குறள் முற்றோதல் இயக்கம்
திருக்குறளுக்கு பல்வேறு அறிஞர்கள் பொருளுரை வழங்கியுள்ளனர். அத்தகைய பெருமை பெற்ற திருக்குறளை அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற போற்றத்தக்க செயலை முயற்சியை தமிழக அரசும் சில தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குறிப்பாக உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் திருக்குறல் முற்றோதலுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி திருக்குறளின் பொருள் விளக்கி மாணவ, மாணவிகளை தயார்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் ஆண்டுதோறும் திருக்குறள் முற்றோதல் செய்து மாணவ, மாணவிகள் சாதனை படைத்து வருகின்றனர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&
கட்டுப்பாட்டால் மாணவர்கள் சோர்வு
தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் திருக்குறளை முற்றோதல் செய்யும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி கவுரப்படுத்தி வந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&
மாவட்டம் தோறும் நடத்தப்படம் திருக்குறள் முற்றோதல் போட்டிகளில் ஆண்டுக்கு 70 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 70 பேருக்கும் மேல் திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களில் 70 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கட்டுப்பாட்டால் மற்ற மாணவர்கள் சோர்வடைந்தனர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&
அப்படி இல்லாமல் திருக்குறள் முற்றோதல் செய்யும் அனைவருக்கும் பரிசு வழங்க வேண்டும் என தமிழக அரசின் கதவுகளை தட்டி கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று நிறைவேற்றியவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கட்டுப்பாடுகள் நீக்கம்
குறிப்பாக இவர் தமிழ் வளர்ச்சித்துறையில் இருக்கும்போதுதான் தமிழ்நாட்டில் 70 பேருக்கு மட்டுமே திருக்குறள் முற்றோதல் பரிசு என்ற எணிக்கையை மாற்ற அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று கட்டுப்பாடுகளை நீக்கி எவ்வளவு பேர் திருக்குறள் கூறினாலும் பரிசு என்ற முயற்சியை மேற்கொண்டார். முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு 124 பேர் திருக்குறள் முற்றோதல் செய்தனர். அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரமாக பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆண்டுக்கு 70 பேருக்கு மட்டுமே பரிசு என்ற கட்டுப்பாடு நீக்கிய பிறகு திருக்குறள் முற்நோதல் செய்யும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 77.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
&&&&&&&&&&&&&&&&&&
முன்னணியில் உள்ள மாவட்டங்கள்
திருக்குறள் முற்றோதல் செய்தலில் முன்னணியில் உள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், விருதுநகர், திருச்சி, திருவள்ளூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ங்கள் உள்ளன.
&&&&&&&&&&&&&&&&&&&&
கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள்
திருக்குறள் முற்றோதலில் கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள் பட்டியலில் ராமநாதபுரம், கரூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை,வேலூர் ஆகிய 7 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
&&&&&&&&&&&&&&&&&&&&&
முற்றோதலில் பரிசு பெற்ற மாவட்டங்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை மனனம் செய்வதால் அதன் பொருள் அறிவதால் மாணவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பதை அறிந்த நம் முன்னோர் பள்ளி தொடக்கக்கல்வி முதல் திருக்குறளை கட்டாயமாக்கினர்.
திருக்குறளின் பொருளை அறிய, அறிய அதை அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிப்பது உண்மை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. திருக்குறள் முற்றோதல் இயக்கம் திருக்குறளுக்கு பல்வேறு அறிஞர்கள் பொருளுரை வழங்கியுள்ளனர். அத்தகைய பெருமை பெற்ற திருக்குறளை அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற போற்றத்தக்க செயலை முயற்சியை தமிழக அரசும் சில தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர். குறிப்பாக உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் திருக்குறல் முற்றோதலுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி திருக்குறளின் பொருள் விளக்கி மாணவ, மாணவிகளை தயார்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் ஆண்டுதோறும் திருக்குறள் முற்றோதல் செய்து மாணவ, மாணவிகள் சாதனை படைத்து வருகின்றனர். கட்டுப்பாட்டால் மாணவர்கள் சோர்வு தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் திருக்குறளை முற்றோதல் செய்யும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி கவுரப்படுத்தி வந்தது. மாவட்டம் தோறும் நடத்தப்படம் திருக்குறள் முற்றோதல் போட்டிகளில் ஆண்டுக்கு 70 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 70 பேருக்கும் மேல் திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களில் 70 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கட்டுப்பாட்டால் மற்ற மாணவர்கள் சோர்வடைந்தனர். அப்படி இல்லாமல் திருக்குறள் முற்றோதல் செய்யும் அனைவருக்கும் பரிசு வழங்க வேண்டும் என தமிழக அரசின் கதவுகளை தட்டி கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று நிறைவேற்றியவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன். கட்டுப்பாடுகள் நீக்கம் குறிப்பாக இவர் தமிழ் வளர்ச்சித்துறையில் இருக்கும்போதுதான் தமிழ்நாட்டில் 70 பேருக்கு மட்டுமே திருக்குறள் முற்றோதல் பரிசு என்ற எணிக்கையை மாற்ற அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று கட்டுப்பாடுகளை நீக்கி எவ்வளவு பேர் திருக்குறள் கூறினாலும் பரிசு என்ற முயற்சியை மேற்கொண்டார். முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு 124 பேர் திருக்குறள் முற்றோதல் செய்தனர். அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரமாக பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. ஆண்டுக்கு 70 பேருக்கு மட்டுமே பரிசு என்ற கட்டுப்பாடு நீக்கிய பிறகு திருக்குறள் முற்நோதல் செய்யும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 77.14 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னணியில் உள்ள மாவட்டங்கள்திருக்குறள் முற்றோதல் செய்தலில் முன்னணியில் உள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், விருதுநகர், திருச்சி, திருவள்ளூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ங்கள் உள்ளன. கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள் முற்றோதலில் பரிசு பெற்ற மாவட்டங்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. #thirukkura #mutrothal |
|||||
by Kumar on 21 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|