தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய டாக்டர் விடுவிக்கப்பட்டுளார். அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தில் வசித்து வருபவர் இந்திய டாக்டர் திலிப் ஜோசப். இவர் ஆப்கானிஸ்தானில் தற்காலிக பணியில் ஈடுபடுத்தப்பட்ட இவரை கடந்த 5ம்தேதி, தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.இந்த விஷயத்தை அறிந்த அமெரிக்கா உடனடியாக கமாண்டோ படையினர் மூலம் திலீப்பை மீட்க முயற்சி மேற்கொண்டது.அமெரிக்க கமாண்டோ படையினர் ஆப்கானிஸ்தான் போலீஸ் உதவியுடன், தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.கடந்த 9ம்தேதி இவர்கள் திலிப் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். திலிப்பையும் அவருடன் இருந்த, ஆப்கன் டாக்டர்கள் இருவரையும் விடுவிக்கும் படி கூறினர். இதற்கு தலிபான்கள் மறுத்ததால் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.இந்த சண்டையில், ஏழு தலிபான்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் சுட்டதில், அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் பலியானார்.இறுதியில், திலீப் மீட்கப்பட்டு அவர் அமெரிக்காவுக்கு அனுப்பட்டார்.
|