மனித கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் இந்திய கணித மேதை சகுந்தலா தேவி நேற்று காலை காலமானார். கடந்த இருவாரங்களாக சுவாசப் பிரச்சனை காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு மரணமடைந்தார். சகுந்தலா தேவியின் மறைவிற்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
|