LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்தோனேஷிய நிலநடுக்கம்: இந்திய அரசு சார்பில் உதவி!

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டோருக்கு இந்திய அரசு சார்பில் உதவிப்பொருட்கள் அனுப்பப்பட்டது.

இந்தோனேஷியாவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சிறிது நேரத்தில் சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக கடலோர குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. 

பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த சடலங்களை பராமரிப்பது கடினம் என்பதாலும், நீண்ட நாட்கள் அடக்கம் செய்யப்படாவிட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாலும்,  ஒரே இடத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு சுமார் ஆயிரம் சடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

பூகம்பம் மற்றும் சுனாமியால் இந்தோனேசியாவில் ஏரளாமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, இந்தோனேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று உறுதியளித்துள்ளார். 

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து குலனாமு சர்வதேச விமான நிலையத்திற்கு நிவாரணப் பொருட்களுடன் விமானப்படை விமானம் ஒன்றின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் அங்கிருந்து நிலநடுக்கம் நேரிட்ட பாலோ விமான நிலையத்திற்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல் மற்றொரு விமானத்தில் 37 மருத்துவர்கள் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

மேலும் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் 3 கப்பல்களும் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

by Mani Bharathi   on 03 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.