கடந்த பத்து வருடங்களாக ஜங்க் புட் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதாக, இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுவாக ஜங்க் புட் சாப்பிடுபவர்களுக்கு விரைவிலேயே ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டு, பல்வேறு புதிய நோய்களுக்கு ஆளாகுவார்கள்.
இந்நிலையில், பிரிட்டனில் வசிக்கும் டேவிட் ஜெபிரிஜ் என்ற முதியவர், கடந்த பத்து வருடங்களாக, ஜங்க் புட் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதாக கூறிய அவர், இதுகுறித்து மேலும் கூறியதாவது, ஆரம்ப காலங்களில் நான் காய்கறிகள் மற்றும் பழங்களை, அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்ட போது, எனக்கு இதய நோய் ஏற்பட்டது, சரியான சமயத்தில் சரியான சிகிச்சையால் நான் உயிர் பிழைத்தேன். இதயத் தமனியில் அடைப்பு இருந்ததால், உணவுக் கட்டுப்பாடு குறித்த ஆலோசனையை கூறிய மருத்துவர்கள், புகைப் பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று கண்டிப்போடு கூறினர். அதன் பிறகு, "ஜங்க் புட்' எனப்படும், கலோரி மிகுந்த, சத்தான நொறுக்குத்தீனிகளை உண்ணும் பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் துவங்கினேன். இப்போதும், தினமும், 5 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறேன். சாக்லேட், சிப்ஸ், மீன், வறுக்கப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் முட்டை அதிகமாக சாப்பிடுகிறேன். உடற்பயிற்சியாக, நடனம் ஆடுவதுடன், தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகிறேன். ஓய்வு நேரங்களில், அதிரடி இசையை கேட்கிறேன். இருபது நிமிடங்களுக்கு, காற்றில் வேகமாக உதைத்தும், குத்துவது போன்றும் உடற்பயிற்சி செய்கிறேன். இதனால், கழுத்து, கைகள் மற்றும் கால்களுக்கு நல்ல பயிற்சி ஏற்படுவதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக உள்ளது. இவ்வாறு, டேவிட் ஜெபிரிஜ் தெரிவித்துள்ளார்.
|